எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஜூலை- 7 - ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் நேற்று 2-வது நாளாக முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து, 11 மாவட்டங்கள் அடங்கிய தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கித் தரவேண்டும் என்று தெலுங்கானா பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து ஆந்திரா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்பொழுது கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டம் விஸ்பரூபம் எடுத்ததை அடுத்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைத்திட மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
தனித் தெலுங்கானா அமைப்பது தொடர்பாக நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழு மத்திய அரசுக்கு 6 விதமான யோசனைகளை கூறியது. அதன் பிறகும் கூட, தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படவில்லை. இதையடுத்து தெலுங்கானா பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்தன.
தனித் தெலுங்கானா அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தெலுங்கான பகுதியை சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 104 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதைபோல 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆந்திர மாநில அமைச்சர்கள் சிலரும் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு இணக்கமான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து தெலுங்கானா பகுதியில் 48 மணி நேர (2 நாள்கள்) முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா அரசியல் போராட்டக்குழு அழைப்பு விடுத்தது. நேற்று முன்தினம் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றபோது உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 2-வது நாளாக நேற்று தெலுங்கான பிராந்தியத்தில் உள்ள 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், வங்கிகள், தியேட்டர்கள், பெட்ரோல்-பங்குகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போனது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் தெலுங்கானா பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஐதராபாத், செகந்தராபாத்தில் மட்டும் 10 ஆயிரம் அரசு போக்குவரத்து கழக பஸ் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டன. அரசு அலுவலகங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன. தெலுங்கானா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள சிங்கரேனி கொல்லியர்ஸ் சுரங்க கம்பெனியில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் இவர்கள் அனைவரும் கடந்த 2 நாட்களாக பணிக்கு வராததால் நிலக்கரி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தெலுங்கானா போராட்டக் குழுவின் அமைப்பாளர் பேராசிரியர் கோதண்டராமை போலீசார் கைது செய்துள்ளனர். உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் கலை கல்லூரியிலிருந்து சட்டமன்றத்திற்கு அருகில் உள்ள கன்பார்க் என்ற இடத்திற்கு உஸ்மானிய பல்கலைக் கழக மாணவர்கள் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்ததை அடுத்து சட்டமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் மூடிவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
வேளச்சேரியில் இளைஞர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Jan 2026சென்னை, சென்னை வேளச்சேரியில் பார்த்திபன் என்ற இளைஞரை இருவர் அரிவாளால் வெட்டிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


