எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐதராபாத், ஜூலை- 7 - ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா பகுதியில் நேற்று 2-வது நாளாக முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து, 11 மாவட்டங்கள் அடங்கிய தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கித் தரவேண்டும் என்று தெலுங்கானா பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து ஆந்திரா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்பொழுது கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டம் விஸ்பரூபம் எடுத்ததை அடுத்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைத்திட மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
தனித் தெலுங்கானா அமைப்பது தொடர்பாக நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழு மத்திய அரசுக்கு 6 விதமான யோசனைகளை கூறியது. அதன் பிறகும் கூட, தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படவில்லை. இதையடுத்து தெலுங்கானா பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்தன.
தனித் தெலுங்கானா அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தெலுங்கான பகுதியை சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 104 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதைபோல 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆந்திர மாநில அமைச்சர்கள் சிலரும் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு இணக்கமான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து தெலுங்கானா பகுதியில் 48 மணி நேர (2 நாள்கள்) முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா அரசியல் போராட்டக்குழு அழைப்பு விடுத்தது. நேற்று முன்தினம் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றபோது உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 2-வது நாளாக நேற்று தெலுங்கான பிராந்தியத்தில் உள்ள 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், வங்கிகள், தியேட்டர்கள், பெட்ரோல்-பங்குகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போனது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் தெலுங்கானா பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஐதராபாத், செகந்தராபாத்தில் மட்டும் 10 ஆயிரம் அரசு போக்குவரத்து கழக பஸ் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டன. அரசு அலுவலகங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன. தெலுங்கானா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள சிங்கரேனி கொல்லியர்ஸ் சுரங்க கம்பெனியில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் இவர்கள் அனைவரும் கடந்த 2 நாட்களாக பணிக்கு வராததால் நிலக்கரி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தெலுங்கானா போராட்டக் குழுவின் அமைப்பாளர் பேராசிரியர் கோதண்டராமை போலீசார் கைது செய்துள்ளனர். உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் கலை கல்லூரியிலிருந்து சட்டமன்றத்திற்கு அருகில் உள்ள கன்பார்க் என்ற இடத்திற்கு உஸ்மானிய பல்கலைக் கழக மாணவர்கள் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்ததை அடுத்து சட்டமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் மூடிவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.