எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப். - 15 - பரமக்குடி சம்பவம் குறித்து நீதி விசாரணை அறிக்கை வந்தபிறகு தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபை நடவடிக்கை நேற்று காலை 10 மணிக்கு துவங்கியதும், சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்தார். திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி முடிந்ததும், தி.மு.க.வினர் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து 5வது நாளாக இவர்கள் இப்படி வெளிநடப்பு செய்கின்றனர். அதன்பிறகு அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் சபாநாயகர் ஜெயக்குமார் தீர்மானம் வாசித்தார். இரங்கல் தீர்மானம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், பா.ம.க. ஆகிய கட்சிகள் சார்பில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டனர். சபாநாயகர் ஜெயக்குமார் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து 4 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபின்னர், செ.கு. தமிழரசன் (குடியரசு கட்சி) பேசினார். அவர் பேசும்போது, பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து அங்கு அமைதி ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் முதல்வர் எடுத்து வருகிறார். இது குறித்து சபையில் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த நான் உத்தரவிட்டு இருந்தேன். டி.ஆர்.ஓ. விசாரணை நடத்தியிருந்தால் இதற்குள் அறிக்கை வந்திருக்கும். அதன் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் தான் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு nullநீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்ட பிறகு அவர்கள் அறிக்கை வந்த பிறகுதான் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைபடிதான் உதவித் தொகையும் அதிகரித்து கொடுக்கமுடியும். nullநீதி விசாரணை அறிவித்திருப்பதால் அதன் அறிக்கை வரும் வரை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அறிக்கை வந்த பிறகு யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முன்னதாக சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்ததற்க்கான காரணம் குறித்து சட்டசபைக்கு வெளியே சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறியதாவது: பரமக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணமான போலீசார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும். தலித் மக்கள் ஆயிரம் பேரை வீடு வீடாக சென்று கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக சபையில் பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். எனவே நாங்கள் வெளி நடப்பு செய்துவிட்டோம்.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) கூறியதாவது: பரமக்குடியில் 7 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். மிருகம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு மனித உயிர்கள் அநியாயமாக பழி வாங்கப்பட்டு உள்ளது. எனவே நஷ்டஈடு அதிகமாக கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சமாதான கமிட்டி அமைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கருத்துக்களை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியதாவது: துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 17 பேரையும் மதுரையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. அப்பாவி மக்கள் 1000 பேர் மீது வழக்கு போட்டு கைது செய்து இருக்கிறார்கள். 7 உயிர்கள் பறிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமாவது கொடுக்க வேண்டும். அமர்வு nullநீதிமன்ற nullநீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., எஸ்.பி. ஆகியோரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசனும் இதே காரணத் துக்காக வெளிநடப்பு செய்ததாக நிருபர்களிடம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


