எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது கூறியதாவது-
பருவமழை பொய்த்து போனதால் பவானிசாகர் அணையில் நடப்பு ஆண்டில் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. எனவே ஈரோட்டை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பவானி ஆற்றில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவானி அணையில் தண்ணீர் இல்லாததால் பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.
கசிவுநீர் திட்டம்
திருப்பூரில் நாட்டு மாடுகளை விற்பனை செய்ய தனியாக மாட்டுச்சந்தை செயல்படுவது போல் ஈரோட்டிலும் நாட்டு மாட்டுச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் பிரதான பயிருடன் ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது வங்கிகளில் பிரதான பயிருக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. பிரதான பயிருடன் சேர்த்து ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல், தரம் சோதித்தல் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உள்ள குழப்பங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 37 கசிவுநீர் திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு கசிவுநீர் திட்டத்தை தூர்வார சமூக அமைப்பு ஒன்று தயாராக உள்ளது. எனவே கசிவுநீர் திட்டங்களை விவசாயிகள் நிதி பங்களிப்புடன் சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
நதிகள் இணைப்பு
பணத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்களை பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தேசிய நீர்வழி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. அதன்படி 106 ஆறுகள் இணைக்கப்பட்டு நீர்வழி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 6 நதிகள் தமிழ்நாட்டில் இணைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறும், காவிரி ஆறும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்.
4 வழிச்சாலை
சித்தோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தின்படி சிற்றூர்களில் 110 அடி, பேரூராட்சிகளில் 100 அடி, நகராட்சிகளில் 90 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நகராட்சி பகுதியில் 65 அடி என மாற்றி அமைக்கப்பட்டது. ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் நகராட்சி பகுதியில் மட்டும் ஏன் குறைவான நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டை போலவே கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 850 அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள வறட்சி மற்றும் சாகுபடிக்கான கூடுதல் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கரும்புக்கான விலையை அதிகரித்து நிர்ணயம் செய்ய வேண்டும். சாய, சலவை தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் வாய்க்கால்களில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். முன்னதாக விவசாயிகள் பலரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.
மஞ்சளை தரம் பிரித்தல்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது- ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரி, டிராக்டர்களில் விற்பனை செய்வதாக புகார் வந்து உள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்கிற அரசாணை உள்ளது. எனவே வங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.
மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல் குறித்து தமிழகத்தில் முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கணினி வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான மென்பொருள் உருவாக்கவும், மஞ்சள் மட்டுமின்றி கொப்பரை தேங்காய், சோளம் போன்ற அனைத்து விளைபொருட்களையும் தரம் பிரித்து ஆய்வுக்கூடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மஞ்சளை தரம் பிரித்து பார்க்க ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த வாய்ப்பை தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கருத்து கேட்பு கூட்டம்
விவசாயிகளுக்கு தேவைப்படும் எந்திரங்கள் குறித்து மனுவாக எழுதி கொடுத்தால் பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான எந்திரங்கள் குறித்து தெரிவிக்கலாம். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சித்தோடு-சத்தியமங்கலம் இடையே 4 வழிச்சாலை அமைக்க அதிக அளவிலான மரங்கள் இடையூறாக உள்ளன. இதில் உயிரோட்டம் உள்ள மரங்களை இடமாற்றி வைக்கவும், மரங்களை வெட்டுவது தொடர்பாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த பணிகள் முடிந்ததும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். பவானி ஆறு, காவிரி ஆறு இணைக்கும் திட்டம் தொடர்பான கடிதம் தமிழக அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
தமிழகத்தில் போட்டியிடும் 60 தொகுதிகளை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
20 Jan 2026சென்னை, சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் போட்டியிடவுள்ள 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல் வ
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


