எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது கூறியதாவது-
பருவமழை பொய்த்து போனதால் பவானிசாகர் அணையில் நடப்பு ஆண்டில் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. எனவே ஈரோட்டை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பவானி ஆற்றில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவானி அணையில் தண்ணீர் இல்லாததால் பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.
கசிவுநீர் திட்டம்
திருப்பூரில் நாட்டு மாடுகளை விற்பனை செய்ய தனியாக மாட்டுச்சந்தை செயல்படுவது போல் ஈரோட்டிலும் நாட்டு மாட்டுச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் பிரதான பயிருடன் ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது வங்கிகளில் பிரதான பயிருக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. பிரதான பயிருடன் சேர்த்து ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல், தரம் சோதித்தல் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உள்ள குழப்பங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 37 கசிவுநீர் திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு கசிவுநீர் திட்டத்தை தூர்வார சமூக அமைப்பு ஒன்று தயாராக உள்ளது. எனவே கசிவுநீர் திட்டங்களை விவசாயிகள் நிதி பங்களிப்புடன் சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
நதிகள் இணைப்பு
பணத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்களை பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தேசிய நீர்வழி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. அதன்படி 106 ஆறுகள் இணைக்கப்பட்டு நீர்வழி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 6 நதிகள் தமிழ்நாட்டில் இணைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறும், காவிரி ஆறும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்.
4 வழிச்சாலை
சித்தோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தின்படி சிற்றூர்களில் 110 அடி, பேரூராட்சிகளில் 100 அடி, நகராட்சிகளில் 90 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நகராட்சி பகுதியில் 65 அடி என மாற்றி அமைக்கப்பட்டது. ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் நகராட்சி பகுதியில் மட்டும் ஏன் குறைவான நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டை போலவே கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 850 அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள வறட்சி மற்றும் சாகுபடிக்கான கூடுதல் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கரும்புக்கான விலையை அதிகரித்து நிர்ணயம் செய்ய வேண்டும். சாய, சலவை தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் வாய்க்கால்களில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். முன்னதாக விவசாயிகள் பலரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.
மஞ்சளை தரம் பிரித்தல்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது- ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரி, டிராக்டர்களில் விற்பனை செய்வதாக புகார் வந்து உள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்கிற அரசாணை உள்ளது. எனவே வங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.
மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல் குறித்து தமிழகத்தில் முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கணினி வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான மென்பொருள் உருவாக்கவும், மஞ்சள் மட்டுமின்றி கொப்பரை தேங்காய், சோளம் போன்ற அனைத்து விளைபொருட்களையும் தரம் பிரித்து ஆய்வுக்கூடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மஞ்சளை தரம் பிரித்து பார்க்க ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த வாய்ப்பை தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கருத்து கேட்பு கூட்டம்
விவசாயிகளுக்கு தேவைப்படும் எந்திரங்கள் குறித்து மனுவாக எழுதி கொடுத்தால் பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான எந்திரங்கள் குறித்து தெரிவிக்கலாம். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சித்தோடு-சத்தியமங்கலம் இடையே 4 வழிச்சாலை அமைக்க அதிக அளவிலான மரங்கள் இடையூறாக உள்ளன. இதில் உயிரோட்டம் உள்ள மரங்களை இடமாற்றி வைக்கவும், மரங்களை வெட்டுவது தொடர்பாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த பணிகள் முடிந்ததும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். பவானி ஆறு, காவிரி ஆறு இணைக்கும் திட்டம் தொடர்பான கடிதம் தமிழக அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகம் நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
14 Jul 2025புதுடெல்லி, சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மிசஸ் & மிஸ்டர் திரை விமர்சனம்
14 Jul 2025வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 175 கோவில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
14 Jul 2025ஈரோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் இதுவரை 3 ஆயிரத்து 325 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.