எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.-திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவினை நடத்துவது தொடர்பாக காலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனிடையே ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு இன்று முதல் துவங்குகிறது.
மதுரை மாவட்டம்,திருமங்கலம் தாலுகாவில் உள்ள கரடிக்கல் கிராமத்திலுள்ள ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2-ம் தேதி 278-வது ஆண்டு உலகப்புகழ் பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது.இதற்காக தற்போது கரடிக்கல் கிராமத்தில் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கரடிக்கல் நான்கு பங்காளிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் கோலாகலமாக செய்து வருகின்றனர்.இதற்காக கரடிக்கல் கிராமத்திலுள்ள மைதானத்தில் காளைகளை நிழலில் வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் இடம்,தென்னை மரத்தினால் ஆன பலம்மிகுந்த வாடிவாசல்,மாவட்ட நிர்வாகம்,முக்கிய பிரமுகர்கள்,பொதுமக்கள்,பார்வையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு என்று தனித்தனி காலரிகள்,வலையுடன் கூடிய இரட்டை வேலி பாதுகாப்பு,குடிநீர்வசதி,காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் தற்போது செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயம் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் அவற்றை அடக்கிட 500க்கும் மேற்பட்ட காளையர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் கிடைமாட்டு காளங்கன்றுகள், தங்கநாணயம்,பீரோ,கட்டில்,அண்டா,பானை,சைக்கிள்,குக்கர்,அயன்பாக்ஸ்,மின்விசிறி,மிக்சி,கிரைண்டர்,பிரிட்ஜ்,தேக்குமர பர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.மேலும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு முதல்நாள்(1ம்தேதி) இரவு 10மணிக்கு கோவில் முன்பாக அமைந்துள்ள கலையரங்கத்தில் கரடிக்கல் கிராம கமிட்டியார்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் பாரம்பரியமிக்க ஸ்ரீவள்ளிதிருமணம் நாடகம் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு இருப்பினும் பூர்வீகமான ஐதீகத்தின்படி கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரடிக்கல் கிராமம் அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2ம்தேதி 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்காக தீவிரமாக நடைபெற்று வரும் பணிகளை கரடிக்கல் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் ஆண்டிச்சாமி,மொக்கராஜ்,ஆண்டிச்சாமி,மணிமுத்து ஆகியோரும் கிராமமக்களும் நேற்று காலை நேரில் பார்வையிட்டனர்.மேலும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளைகளை அடக்கிடும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு இன்று முதல் தொடங்கி 1ம் தேதி வரை நடைபெறுவதாகவும்,மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி ஜல்லிக்கட்டு விழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட இருப்பதாகவும் விழாகமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.பல்வேறு தடைகளை தாண்டி 12ஆண்டுகளுக்கு பிறகு கரடிக்கல் கிராமத்தில் வரும் 2ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு கிராமம் முழுவதும் தோரணங்கள்,பேனர்கள்,வரவேற்பு பதாகைகள் என விழாக்கோலம் பூண்டிருப்பதுடன் கிராமமக்கள் மகிழச்சியில் திளைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை
11 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உ
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.