எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் இந்தியாவில் அதிக உயரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
2250 மீட்டர் உயரத்தில்
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள எம்.பாலாடா பகுதியில் அமைந்துள்ளது குட்செப்பர்டு சர்வதேச பள்ளி. இப்பள்ளியில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் டாக்டர் பி.சி.தாமஸ் தலைமை தாங்கினார். விழாவில் இந்தியன் ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேசிய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது_
உயர்மட்ட குழு
இந்தியாவிலேயே ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் அறிவிக்க வேண்டும். வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார். இக்குழுவில் இந்தியா சார்பில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு சங்க பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு மூன்று மாதங்களுக்கு ஒரு கூடி தங்களது பரிந்துரைகள் தெரிவிக்கும். பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள 28 விளையாட்டுகளை தேர்வு செய்து அதில் போட்டியிடும் வீரர்களின் திறனை மேம்படுத்தும். நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. பதக்கங்கள் குறைவாக பெற்றாலும், 8 பிரிவுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வரும் போட்டிகளில் அதை மேம்படுத்த அனைத்து வகையிலும் ஆராயப்படும்.
இந்தியாவில் 2040ம் ஆண்டு
வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஒரு இடத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து 8 ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து விடுவார்கள். ஆகையால் தற்போதைக்கு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. வரும் 2040ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வாய்ப்புகள் அதிகம். அது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்திய ஒலிம்பிக் சங்க செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆதரவு அளிப்பதோடு தேவையான நிதியுதவியையும் அளித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு திறமைதான் முக்கியம். அவர்களுக்கு அரசு மூலம் தேவையான நிதியுதவி கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இவ்விழாவில் பள்ளியின் நிர்வாக குழு தலைவரும் முன்னாள் நீலகிரி மாவட்ட கலெக்டருமான வி.செல்வராஜ், பள்ளியின்
போர்ட் ஆப் கவர்னர்ஸ் மற்றும் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்களுமான கே.எஸ்.ஸ்ரீபதி, தேவேந்திரநாத் சாரங்கி, சென்னை டிரைகின் டெக்னாலஜிஸ் நிறுவன சேர்மன் கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பள்ளியின் தலைமை துணை முதல்வர் எலசம்மா தாமஸ், துணை முதல்வர்கள் ஜூலி பிரதீஸ், பிரிகேடியர் சுரேஷ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தனஞ்செயன், முதல்வரின் செயலர் மனோஜ் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது
23 Oct 2025சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது என்றும் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.