எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.15 - அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளான இடது கம்யூனிஸ்ட் மற்றும் வலது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை பெற்ற இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதி அளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தமாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலை சந்திக்கினறன. அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., வைகோ தலைமையிலான ம.தி.மு.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், மற்றும் இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளஞர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளில் ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவர, மற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. ம.தி.மு.க.வுடனும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்தநிலையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. முன்னதாக நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வலது கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, தா.பாண்டியன், மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் போயஸ்கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அன்புடன் வரவேற்றார். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் தா.பாண்டியனும் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தா.பாண்டியன் கூறுகையில் மத்திய மாநில அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தோழமை கட்சிகளின் வெற்றிக்கும் நாங்கள் பாடுபடுவோம் என்று கூறினார்.
ஜனநாயகத்தை மீட்கவும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் சுறுக்கமாக சொன்னால் தமிழ்நாட்டை மீட்கும் போராட்டமாக எங்கள் கூட்டணியின் போராட்டம் அமையும் என்றும் வலது கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியன் கூறினார். 10 தொகுதிகள் என்னென்ன என்று கேட்டபோது ஜெயலலிதா நாளை (இன்று) அறிவிப்பார் என்று கூறிய தா.பாண்டியன், 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததில் தங்களுக்கு திருப்தியே என்றும் தெரிவித்தார்.
இடது கம்யூனிஸ்டுக்கு 12 தொகுதிகள்
அதன் பிறகு இடதுகம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பிற்பகல் 3.30 மணி அளவில் போயஸ் கார்டன் வந்தார். அவருடன் மத்திய கமிட்டி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சென்ற ராமகிருஷ்ணன்,அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த சந்திப்பின்போது இடது கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் ராமகிருஷ்ணனும்ம் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸை எதிர்த்து தங்கள் கட்சி கடுமையாக தேர்தல் களத்தை சந்திக்கும் என்றும் ராமகிருஷ்ணன் கூறினார். இந்த கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் பூரிப்போடு தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
தமிழகத்தில் போட்டியிடும் 60 தொகுதிகளை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
20 Jan 2026சென்னை, சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் போட்டியிடவுள்ள 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல் வ
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
-
வேளச்சேரியில் இளைஞர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Jan 2026சென்னை, சென்னை வேளச்சேரியில் பார்த்திபன் என்ற இளைஞரை இருவர் அரிவாளால் வெட்டிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


