எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 2018-19 ஆம் ஆண்டில் 133 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அலகுகள் நிறுவப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கூட்டுறவு துறை குறித்த மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ 12 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதன் விபரம் வருமாறு:-
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையினை நவீன வசதிகள் வழங்க 14 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் தற்போதைய அலுவலகக் கட்டிடங்கள் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 10 கூட்டுறவு நிறுவனங்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகங்கள் ரூ.32.70 லட்சம் மதிப்பீட்டிலும், 9 கூட்டுறவு நிறுவனங்களில் நவீன உயர்தர பாதுகாப்புப் பெட்டகங்கள் ரூ.37.53 லட்சம் மதிப்பீட்டிலும், 13 கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டகங்கள் ரூ.28.21 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 32 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.98.44 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு, கல்குளம் விளவங்கோடு மற்றும் திண்டுக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் சின்னகல்ராயன் பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றிற்கு ரூ.61.70 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், திருப்பூர், தாராபுரம், பல்லடம், திருச்செங்கோடு மற்றும் பழனி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் அலுவலகக் கட்டிடங்கள் ரூ.49.60 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்குதல், சத்தியமங்கலம் மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ரூ.35.00 லட்சம் மதிப்பில் ஏலக்களத்திற்கு மேற்கூரை அமைத்தல், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் திண்டல் கிளையில் ரூ.11.40 லட்சம் மதிப்பில் பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை அமைத்தல், திருப்பெரும்புதூர் மற்றும் மதுராந்தகம் தாலுக்கா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.39.லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் மொத்தம் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுமை சமையல் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை பிற கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகம் செய்வதற்கும், பொது விநியோகத்திட்ட பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யவும் இரண்டு வாகனங்கள் மற்றும் சத்தியமங்கலம் மற்றும் பவானி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு பொது விநியோகத்திட்ட பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்திட தலா ஒரு வாகனம் என மொத்தம் ரூ.69.41 லட்சம் மதிப்பீட்டில் 4 வாகனங்கள் வாங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சொந்தமாக திருவாரூர் மாவட்டம், பாமணி என்ற இடத்தில் செயல்படும் உரத்தயாரிப்பு ஆலை பாமணி 17:17:17 என்ற குருணை வடிவிலான உரத்தினை உற்பத்தி செய்து வருகிறது. மேற்படி உர ஆலையின் செயல்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் வேளாண் விளைப்பொருட்களைப் பதப்படுத்தி, மதிப்பினைக் கூட்டி விற்பனை செய்து விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிக இலாபம் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தினை வளமாக்கிக் கொள்ள, சத்தியமங்கலம் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில், சிறுதானியங்களில் உமி, தூசி நீக்கும் அலகு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும். கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கடலூர் மாவட்ட சரவணபவா நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு, கட்டுப்பாடற்ற பொருட்களை கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏதுவாகவும், நுகர்வோர் சேவைகளை மென்மேலும் பெருக்கவும் நடைமுறை மூலதனக் கடன் ரூ.50 லட்சம் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் பண்டகசாலையின் வியாபார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், சுற்றுச்சுவர் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கேழ்வரகு மற்றும் கோதுமை மாவு அரைக்கும் இயந்திரம், பேக்கிங் மெஷின் கன்வேயர் மற்றும் அரவைக்கூடத்தினை நவீனமயமாக்கும் பணிகள் ரூ.23.94 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். நுகர்வோர்களுக்கு தரமான நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கு ஏதுவாக, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கேழ்வரகு மாவு அரைக்கும் இயந்திரம் ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டிலும், அதற்கான மாவு பேக்கிங் மெஷின் மற்றும் கன்வேயர் ரூ.7.15 லட்சம் மதிப்பீட்டிலும், கோதுமை அரைக்கும் இயந்திரம் ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டிலும், அதற்கான மாவு பேக்கிங் மெஷின் மற்றும் கன்வேயர் ரூ.7.15 லட்சம் மதிப்பீட்டிலும், மேற்படி அரவைக்கூடத்தினை நவீனமயமாக்கும் பணிகளை ரூ.6.68 லட்சம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் மேற்படி பணிகள் அனைத்தும் ரூ.23.94 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும், மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் உறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு, புதிய அலுவலகக் கட்டிடம் மற்றும் வணிக வளாகம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
பொதுமக்களுக்கும், நுகர்வோர்களுக்கும் தரமான நுகர்பொருள்களை நியாயமான விலையில் வழங்கி, விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றி வரும் கூட்டுறவு பண்டகசாலையின் சேவையினை மேலும் மேம்படுத்திட ஏதுவாக, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் உள்ள சுயசேவைப் பிரிவினை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்குச் சொந்தமான இடத்தில், புதிய கிடங்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும் பண்டகசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நீர்சுத்திகரிப்பு கருவி அமைக்கவும் மற்றும் கண்காணிப்புக் கேமிரா ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தவும் ஆக மொத்தம் ரூ.12.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக, விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்குச் சொந்தமான இடத்தில், புதிய சுயசேவைப்பிரிவு ரூ.9.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணா நகர் இரண்டாவது அவென்யூ கிளையில் வாடிக்கையாளர்களின் மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட தானியங்கி வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் கடவுச் சொல்லினை பதிவு செய்து பாதுகாப்பு பெட்டக வசதியைபயன்படுத்த இயலும். இந்த தானியங்கி பாதுகாப்பு பெட்டகம் உயர்தர பாதுகாப்பும், துல்லிய சேவையையும் வழங்கக் கூடியவை. கூட்டுறவு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவையினை தடையின்றி வழங்கவும், கூட்டுறவு நிறுவனங்களில் மின் செலவினத்தைக் குறைக்கவும், 2018-19 ஆம் ஆண்டில் 133 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 7.01 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அலகுகள் நிறுவப்படும்.
மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் 11 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 66.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள காலி இடங்களில் வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபம் கட்டுவதன் மூலம், சங்கங்களின் வருவாயைப் பெருக்க முடியும் என்பதால், 5 கூட்டுறவு நிறுவனங்களில் வணிக வளாகமும், 1 கூட்டுறவு நிறுவனத்தில் திருமண மண்டபமும் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் இவ்வாண்டில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக கட்டப்படும். இதனால் இச்சங்கங்களில் உள்ள காலி இடங்களை முழுமையாகப்பயன்படுத்தி, இந்த வளாகங்களை வாடகைக்கு விடுவதன் மூலமாக சங்கங்களின்நிதிநிலை உயரும். வணிக வங்கிகளுக்கு இணையாக நவீன தொழில்நுட்ப சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணா நகர் 2-வது அவென்யூ கிளை மற்றும் பாண்டிபஜார் கிளைகளில் வாடிக்கையாளர்கள், 24 மணி நேரமும் பணம் செலுத்த மற்றும் பணம் பெற ஏதுவாக பணம் செலுத்தும் இயந்திரம் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மற்றும் கணக்கு புத்தக அச்சு இயந்திரம் ஆகியன ரூ.20.லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மேலும் வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பெற ஏதுவாக முத்தியால்பேட்டை மற்றும் இராயபுரம் கிளைகளில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும். ஆக மொத்தம் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இச்சேவைகளை வழங்க ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும். நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக நகர்ப்புறத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை, நகர மக்களின் வங்கித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மாற்றியமைப்பது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 2018-19 ஆம் ஆண்டில் 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்களாக மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 days ago |
-
பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் வருமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
01 May 2025திருச்சி: கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
54-வது பிறந்தநாள்: நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து
01 May 2025சென்னை, 54-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
போர் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வ
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது: டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
01 May 2025சென்னை, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது என டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேரளா, தமிழக பகுதிகளில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
01 May 2025சென்னை: இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும், மே 15-ம் தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகு
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
01 May 2025புதுடெல்லி, சாதிவாரி கணக்கெடுப்புஅறிவிப்பை வரவேற்றுள்ள, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ: இஸ்ரேலில் தேசிய அவசர நிலை
01 May 2025ஜெருசலேம், ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதால் இஸ்ரேலில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்பில்லை: பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு
01 May 2025இஸ்லாமாபாத், பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மீண்டும் மறுத்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி கோரிக்கை
01 May 2025புதுடில்லி, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல்: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.
-
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை
01 May 2025அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பஹல்காமுக்கு முன்பு மூன்று இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? விசாரணையில் திடுக் தகவல்
01 May 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
01 May 2025சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
ஆந்திராவில் பயங்கரம்: வீடு மீது கார் மோதிய விபத்தில் ஐந்து மருத்துவ மாணவர்கள் பலி
01 May 2025நெல்லூர், ஆந்திராவில் வீடு மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பிரதமர் என்னை பின்தொடர்வதால் பா.ஜ.க. தலைவர்களுக்கு பொறாமை: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
01 May 2025ஐதராபாத், பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பின் தொடர்வதினால் உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.
-
அட்சய திருதியை நாளில் தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை
01 May 2025சென்னை: அட்சய திருதியை நாளில் 27,440 பத்திரப்பதிவின் மூலம் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
01 May 2025மும்பை, மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
01 May 2025சென்னை, சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் திருமண மண்டபம், பள்ளி வகுப்பறை, கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
-
கரும்புக்கு ரூ.355 ஆதாய விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 May 2025புதுடில்லி, கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
அமலுக்கு வந்த ஏ.டி.எம். கட்டண உயர்வு
01 May 2025புதுடெல்லி, ஏ.டி.எம். கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஓரிரு நாட்களில் வெளியாகிறது: 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்
01 May 2025சென்னை, 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தியாவில் 17 பெண் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்
01 May 2025புதுடெல்லி, இந்தியாவில் 17 பெண் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
-
சென்னையில் அ.தி.மு.க. சார்பில் வரும் 7-ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 May 2025சென்னை, சென்னையில் வரும் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
மதுரையில் விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
01 May 2025மதுரை, மதுரைக்கு வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு எச்சரிக்கை
01 May 2025சென்னை, தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.