எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தொழிலாளர்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு தொழிலாளர் தோழர்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகிழும் திருநாள்...
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் நேற்று நடைபெற்ற மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உருண்டோடுகின்ற ரயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான். இழையை நூற்று நல்லாடை நெய்பவன் யார் என்று கேட்டால் அவரும் தொழிலாளி தான். இரும்பு காய்ச்சி உருக்குபவன் யார் என்று கேட்டால் அவரும் தொழிலாளி தான். மிராசுதாரர்கள் மேனாமினுக்கி வாழ்க்கைக்கான பொருள்களை உருவாக்கித் தரக்கூடியவர்கள் தொழிலாளியாக தான் இருக்கிறார்கள். கடலில் மூழ்கி முத்து எடுப்பவனும் தொழிலாளியாக தான் இருக்கிறான். உழுது நன்செய் பயிரிடுபவனும் தொழிலாளி தான். அந்தத் தொழிலாளியின் இனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள்தான் மே தினம் என்று நம்முடைய அண்ணா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
திராவிடர்கள் என்றாலே...
அத்தகைய சிறப்புமிக்க, தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என்று பெரியார் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். 1932-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தவர் தான் தந்தை பெரியார்.
தோழர்கள் என்று அழைக்க...
ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டு தாயகமாம் தமிழகத்திற்கு திரும்பிய தந்தை பெரியார், இனி அனைவரையும் தோழர்கள் என்று அழைக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய சென்னை நகரம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது. எட்டு மணி நேரம் வேலை எனும் உரிமைப்போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன்முதலில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது இந்த சென்னை மாநகரத்தில் தான் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
ஊதியத்துடன் விடுமுறை....
அதற்கும் முன்பே, இந்தியத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக குறைக்க பெரும் முயற்சிகளை நீதிக் கட்சித் தலைவரான டி.எம்.நாயர் எடுத்திருக்கிறார். 'உழைப்புக்கு மதிப்பளிப்பது உண்மையாக இருக்க வேண்டும் என்று சொன்னால், உழைப்பவனுக்கு முதலில் மதிப்பளிக்க வேண்டும் என்றார் அண்ணா. அதன்படியே, 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மே-1 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அண்ணா கொண்டு வந்தார்.
சட்டமாக்கினார் கருணாநிதி...
அதற்கு பிறகு பொறுப்பேற்ற கருணாநிதி அந்த மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தார். அதற்கு பிறகு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மே 1 நம்முடைய மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலத்திற்கும் தொழிலாளர் தினத்தை ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, கருணாநிதி அதையும் நிறைவேற்றி தர பாடுபட்டார் என்பதும் உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
எத்தனையோ சாதனைகள்...
இந்தப் பகுதியில் இங்கே நின்று கொண்டிருக்கிறோமே இந்த மே தின பூங்கா இதையும் உருவாக்கித் தந்தவர் தான் கருணாநிதி. பூங்காவை மட்டும் அல்ல, அதில் உள்ளே அமைந்திருக்கக்கூடிய நாங்கள் எல்லாம் சென்று மலர் வளையம் வைத்து, எங்கள் அஞ்சலியை, எங்கள் மரியாதையை, வணக்கத்தை செலுத்திவிட்டு வந்திருக்கிறோமே அந்த நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கருணாநிதிதான் என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு எடுத்துச் சொல்லி, இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இந்த 4 ஆண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை தேர்தல் நேரத்தில் அறிவித்திருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அதிலும் குறிப்பாக தொழிலாளர்களுக்காக செய்திருக்கக்கூடிய சாதனைகள் ஒன்றிரண்டை நான் உங்களிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால்,
நலத்திட்ட உதவிகளை...
கடந்த நான்காண்டு காலத்தில் 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரத்து 461 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம். உணவு மற்றும் பிற பொருள்களை டெலிவரி செய்யும் (கிக்) தொழிலாளர்களுக்கும், தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்களுக்கும் தனி நல வாரியத்தை அமைத்திருக்கிறோம். பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, அதையும் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிறோம்.
கார்ல் மார்க்ஸ் சிலையை...
20 அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்களில், 2021-24 காலக்கட்டத்தில் 16 லட்சம் ஊழியர்கள் புதிதாக பதிவு செய்திருக்கிறார்கள். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அமரும் உரிமையை கட்டாயமாக்கி அரசாணையை வெளியிட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, உலக மாமேதை பொதுவுடைமை தத்துவத்தை அளித்த பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலையை சென்னையில் அமைப்போம் என்று நாம் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறோம். அதுவும் விரைவில் அமைக்கப்பட இருக்கிறது.
எவ்வளவு பேருக்கு வேலை....
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இதன் மூலமாக, தொழிலாளர்களும் வளர்ந்து வருகிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டாலும், அப்போது நான் முதலாவதாக கேட்பது என்னவென்றால், எவ்வளவு பேருக்கு வேலை தருவீர்கள் என்ற கேள்வியைத்தான்.
சமப்படுத்த வேண்டும்...
வேலை தருபவர் - பணியாளர் ஆகியோர் இடையிலான உறவை சமரசத்தின் மூலமாக நாம் சமப்படுத்த வேண்டும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சாமானிய மக்களுக்காக, சாமானியர்களின் ஆட்சி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். என்றைக்கும் உங்கள் கூட - உங்களுக்காக நிற்கும், உங்களில் ஒருவன்தான் நானும், நம்முடைய அரசும். இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எங்களின் இலட்சியம், கொள்கையாக வைத்து இலக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இதை மனதில் வைத்துதான் அரசு பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது.
4-வது ஆண்டு நிறைவு....
இன்னும் ஒரு வார காலத்தில், திராவிட மாடல் ஆட்சி உருவாகி, 4-வது ஆண்டை நிறைவு செய்து, 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். எனவே, மே தினம் கொண்டாடக்கூடிய இங்கே இருக்கக்கூடிய தொழிலாளர் தோழர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அந்த உறுதியை இந்த நல்ல நாளில் எடுத்துக் கொள்வோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
''1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மே-1 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அண்ணா கொண்டு வந்தார். அதற்கு பிறகு பொறுப்பேற்ற கருணாநிதி அந்த மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தார். மே தின பூங்காவை மட்டும் அல்ல, நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கருணாநிதிதான்.''
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 days ago |
-
54-வது பிறந்தநாள்: நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து
01 May 2025சென்னை, 54-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
போர் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வ
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
01 May 2025புதுடெல்லி, சாதிவாரி கணக்கெடுப்புஅறிவிப்பை வரவேற்றுள்ள, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் வருமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
01 May 2025திருச்சி: கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது: டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
01 May 2025சென்னை, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது என டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
01 May 2025சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்பில்லை: பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு
01 May 2025இஸ்லாமாபாத், பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மீண்டும் மறுத்துள்ளது.
-
மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
01 May 2025மும்பை, மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
ஆந்திராவில் பயங்கரம்: வீடு மீது கார் மோதிய விபத்தில் ஐந்து மருத்துவ மாணவர்கள் பலி
01 May 2025நெல்லூர், ஆந்திராவில் வீடு மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
01 May 2025சென்னை, சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் திருமண மண்டபம், பள்ளி வகுப்பறை, கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
-
ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ: இஸ்ரேலில் தேசிய அவசர நிலை
01 May 2025ஜெருசலேம், ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதால் இஸ்ரேலில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பஹல்காமுக்கு முன்பு மூன்று இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? விசாரணையில் திடுக் தகவல்
01 May 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதல்: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.
-
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி கோரிக்கை
01 May 2025புதுடில்லி, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை
01 May 2025அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அட்சய திருதியை நாளில் தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை
01 May 2025சென்னை: அட்சய திருதியை நாளில் 27,440 பத்திரப்பதிவின் மூலம் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
ஓரிரு நாட்களில் வெளியாகிறது: 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்
01 May 2025சென்னை, 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தியாவில் 17 பெண் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்
01 May 2025புதுடெல்லி, இந்தியாவில் 17 பெண் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
-
கேரளா, தமிழக பகுதிகளில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
01 May 2025சென்னை: இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும், மே 15-ம் தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகு
-
கரும்புக்கு ரூ.355 ஆதாய விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 May 2025புதுடில்லி, கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
அமலுக்கு வந்த ஏ.டி.எம். கட்டண உயர்வு
01 May 2025புதுடெல்லி, ஏ.டி.எம். கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
சென்னையில் அ.தி.மு.க. சார்பில் வரும் 7-ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 May 2025சென்னை, சென்னையில் வரும் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் : ரஜினிகாந்த்
01 May 2025மும்பை, காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
01 May 2025மதுரை, மதுரைக்கு வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
சென்னை எல்லை சாலைத் திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
01 May 2025திருவள்ளூர், திருவள்ளூர் அருகே, ஈக்காடுகண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.