எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 2-ம் கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று மாலை தேவகோட்டையில் துவங்குகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வண்ணம் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னுறுத்தி தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் பேரவையின் மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சைக்கிள் பிரச்சார பேரணி மேற்கொள்கிறார்கள். இந்த சைக்கிள் பேரணியை மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் கடந்த 15-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அம்மா திடலில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணியாக புறப்பட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும், கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி மீண்டும் துவங்கிய இடமான அம்மா திடலை அடைந்து நிறைவு பெற்றது. இந்த சாதனை விளக்க சைக்கிள் பயணத்தின் போது தொகுதி வாரியாக நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் சைக்கிள் பிரச்சார பேரணிக்கு தலைமையேற்று சென்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு கோடிக்கணக்கான மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சைக்கிள் பிரச்சார பேரணி செல்லும் வழியில் பல இடங்களில் குடிமராமத்து பணி, கோவில் குளங்கள் தூர்வாறும் பணியிலும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்த சைக்கிள் பேரணிக்கு மதுரை மாவட்ட மக்கள் மகத்தான வரவேற்பு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து 2-வது கட்ட சைக்கிள் பிரச்சார பேரணி இன்று 4 - ம் தேதி மாலை 5 மணியளவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆயிரம் இளைஞர்களுடன் அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் துவங்குகிறது. சைக்கிள் பேரணி துவக்க விழாவில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தில்நாதன் எம்.பி, மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு பேரணியில் கலந்து கொள்ளும் ஆயிரம் இளைஞர்களும் தேவகோட்டையில் தங்குகிறார்கள்.
மறுநாள் ஆகஸ்ட் 5 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தேவகோட்டையில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் புறப்பட்டு கண்டதேவி, சண்முகநாதபுரம், ஆராவயல், அமராவதி புதூர், ரஸ்தா வழியாக காரைக்குடி நகரை நண்பகலில் சென்றடைகிறது. காரைக்குடி அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுகிறது. இதில் சைக்கிள் பேரணியாக செல்லும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்குகிறார்கள். பின்னர் மாலையில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சைக்கிள் பிரச்சார பேரணி திருப்பத்தூர் நகரை மாலையில் வந்தடைகிறது. அங்கு இரவில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கு அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவில் திருப்பத்தூரில் தங்குகிறார்கள்.
ஆகஸ்ட் 6 - ம் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் திருப்பத்தூரில் இருந்து சைக்கிள் பிரச்சார பேரணி புறப்பட்டு திருக்கோஷ்டியூர், ஏரியூர் விளக்கு,மதகுபட்டி, ஓக்கூர், சோழபுரம், காஞ்சிரங்காள் வழியாக சிவகங்கை நகரை நண்பகலில் சென்றடைகிறது . அங்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் சைக்கிள் பயண இளைஞர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து அன்று மாலை சைக்கிள் பேரணி சிவகங்கையில் இருந்து புறப்பட்டு வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, மானாமதுரை சிப்காட் வழியாக மானாமதுரை பேரூராட்சியை வந்தடைகிறது. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவிற்கு பின்னர் மானாமதுரையில் இருந்து சைக்கிள் பேரணி புறப்பட்டு பார்த்திபனூரை சென்றடைகிறது. அங்கு இரவில் சைக்கிள் பயண இளைஞர்களுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தங்குகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


