முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபில்சிபலுக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா - மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்படுவது சாரதா நிதி நிறுவன ஊழல். இந்த ஊழல் தொடர்பாக அம்மாநில போக்குவரத்து அமைச்சர் மதன்மித்ரா கைது செய்யப்பட்டது தெரிந்ததே.

சில திரிணாமுல் எம்.பி.களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில்  மேற்கு வங்க அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னால் அமைச்சர் கபில்சிபல் ஆஜராகிறார்.

இது காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவர் ஆஜரானால் இந்த மோசடியில் காங்கிரசுக்கு தொடர்பு இருக்கிறது என்று மக்கள் நினைக்கக் கூடும். ஆகவே இந்த வழக்கிலிருந்து கபில்சிபல் விலக வேண்டும் அல்லது கட்சி பொறுப்பிலிருந்து அவர் விலக வேண்டும் என்று காங்கிரசார் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து