முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மிக்கு வாக்களித்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி -   டெல்லியில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்த தவறை மீண்டும்   செய்யவேண்டாம் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும்  தேர்தல் பிரச்சாரத்தில்  பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்   மல்கா  கன்ஞ் அருகே  திமார்பூர் என்ற பகுதியில்  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் கடந்த  சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு  வாக்களித்தது போன்ற தவறுகளை இம்முறை வாக்காளர்கள் மீண்டும் செய்யாதீர்கள். அவர்கள் செய்த தவறைமக்கள்  தற்போது உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  கிரண்பேடி ஒரு இரும்பு  மங்கை. பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும்  திறமையாகச் செய்யக்கூடியவர்.

டெல்லியில்  அனைத்து   பிரச்சனைகளையும் தீர்க்கும் திறமை படைத்தவர். வேலையில்லா திண்டாட்டம், வறுமை  ஆகிய இரு முக்கிய பிரச்சனைகளைநாடு  எதிர்கொண்டுள்ளது.  இவற்றை தீர்க்க  பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. வேலையில்லா  திண்டாட்டத்தை  போக்கத்தான் மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  வறுமையை ஒழிக்க ஜன் தன் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு  குடும்பத்திற்கும் வங்கி  கணகக்கு  தொடங்கப்பட்டு மத்திய அரசின்  சமூக நலத்திட்டங்களை வகை செய்யப்பட்டுள்ளது என்று  அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து