முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: பாதுகாப்பு பணியில் 10 கம்பெனி துணை ராணுவம்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 13–ந் தேதி நடக்கிறது. அதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் என 4 முனைப்போட்டி நடக்கிறது.

இக்கட்சிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்து சென்று முகாமிட்டு பிரமுகர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. எனவே, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:–

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கு 10 கம்பெனி துணை ராணுவம் வர உள்ளது. ஓட்டு பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு துணை ராணுவம் வந்து சேருவார்கள்.தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் புதிதாக பிரமுகர்கள் யாரும் வருவதாக தெரிவிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து