முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு திருமலை தபால் நிலையத்தில் டிக்கெட்

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும். இதனை அறியாத கிராம மக்கள் கோவிலுக்கு வந்து டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் கிராம மக்களும் பயன்பெறும் வகையில் தபால் நிலையத்தில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் வசதியை தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது.

ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள 97 தபால் நிலையங்களில் இந்த வசதி முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் தினமும் 20 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது. இருந்த போதிலும் பலர் இது தெரியாமல் திருமலை வந்து ஏமாற்றம் அடைகிறார்கள்.

இதனால் திருமலை தபால் நிலையத்தில் ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இங்கு 4 இன்டர்நெட்மையம் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் இந்த மையம் செயல்பட தொடங்கும்.

இங்கு தினமும் 5 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 25,904 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தர்ம தரிசனத்துக்கு 12 மணி நேரமானது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 5 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து