முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவணங்கள் திருட்டு: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பெட்ரோலியம், பாதுகாப்பு அமைச்க ஆவணங்கள் திருட்டுப் போனது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் அக்கட்சியின் உறுப்பினர் பிரமோத் திவாரி பேசியதாவது,

அமைச்சக ஆவணங்கள் திருட்டு போனது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரமாகும். இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த அரசு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தங்களது அமைச்சரவையை காக்க முடியாத அமைச்சர்கள் நாட்டை எப்படி பாதுகாக்க போகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக உறுப்பினர் விஜய் கோயல் பேசுகையில், ஆவணங்கள் திருட்டு தற்போது திடீரென நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கட்டுக்கடங்காமல் நடைபெற்றது. ஆனால் குற்றவாளிகள் தற்போதைய ஆட்சியில்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து