எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிப்புக்கு ஜெயலலிதா வரவேற்ப்பு தெரிவித்திருக்கிறார். 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிடுள்ள அறிக்கை வருமாறு:-.
2015-2016ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட இருக்கும் சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார உத்திகளை முற்றிலும்
வெளிப்படுத்துவதாக உள்ளது.
மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், நிதியமைச்சர் தனது இலக்கினை துல்லியமாக முடிவுசெய்து துணிச்சலான முயற்சியை எடுத்துள்ளார். பொருளாதாரத்தை மாற்றி அமைத்திருப்பதாகவும், மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைத்திருப்பதாகவும், மத்திய நிதியமைச்சர் பெருமைப்பட்டுக்கொள்கிறார். சில கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் சாதகமான நிலைமைகள்
ஏற்பட்டாலும், பெட்ரோலிய விலை வீழ்ச்சியால் துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் பயன்கள் நுகர்வோரை சென்றடையவில்லை என்பதை, மத்திய அரசின் பல்வேறு வரிவிதிப்புகள் காட்டுகின்றன.
பெட்ரோல் டீசல் ஆகியவற்றில் மத்திய அரசு 4 சதவீதம் சேவை வரியாக வசூலிப்பது மாநில வருவாயை பாதிக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்துள்ள போதிலும் அதன் பயன் மக்களுக்கு சென்றடையவில்லை. முந்தைய பட்ஜெட்டில் திட்டச்செலவினத்திற்காக ரூ 5.லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யுப்பட்டது. 20014-15-ஆம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 532 கோடியாக குறைக்கப்ப்ட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் இந்த தொகை 4லட்சத்து 65 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான இலக்கில், மாநிலங்களுக்கு பெரும் பங்கு வழங்கும் கூட்டாட்சியில் ஒத்துழைப்பு" குறித்து பெருமளவில் பேசப்பட்டு வரும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகள் இதனை பொய்யாக்கும் வகையில் அறிவிப்புகள் உள்ளது.,14-வது நிதிக்குழு கமிஷன் 32- லிருந்து 42 சதவீதமாக
பங்குகளை அதிகரித்துள்ள நிலையில், அதனை மத்திய அரசு பல வகைகளில் பறித்துக்கொள்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீது விதிக்கப்பட்ட லிட்டருக்கு 4 ரூபாய் என்ற வரியின் வருமானம் மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
முந்தைய பட்ஜெட்டில் பொது செலவினங்களுக்காக 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 4 லட்சத்து 75 ஆயிரத்து 532 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது - இதேபோல், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிதியும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது - இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க
வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று இதற்காக 3 இடங்களில் நிலம் ஒதுக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் தங்களுக்கு கடிதம் எழுதியிருந்ததேன்.அதே நேரத்தில் உலக பாரம்பரிய கலாச்சார சின்னத்திற்கான உதவியை பெறுவதற்கு தமிழ்நாட்டில் எந்த ஒரு பாரம்பரிய கலாச்சார சின்னமும் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
மத்திய அரசு வழங்கும் மானியங்கள், தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காக, இத்திட்டத்தில் சில கட்டுப்பாடுகளை இந்த பட்ஜெட் முன்வைக்கும் அதேநேரத்தில், ஏழை-எளிய மக்கள் பெறக்கூடிய மானியங்கள் மற்றும் உதவித்தொகைகள், எந்தவகையிலும் குறைக்கப்பட்டுவிடக் கூடாது.மானிய உதவிகளை பயனாளிகளுக்கு ரொக்கமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அதே நேரத்தில், இத்தகைய நடைமுறை உரம் மற்றும் உணவு பொருட்கள் மீது கண்மூடித்தனமாக செயல்படுத்தப்பட்டு விடக்கூடாது அடிப்படை வசதிகளான வீடு, மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்திருந்தாலும், அவை செயல்படுத்தப்படும் விவரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சுய உதவிக்குழுக்கள் அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்புகளுக்கு மட்டுமின்றி, சிறு-குறு நிறுவனங்களுக்கு நிதி அளிக்க முத்ரா வங்கி தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற
மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன - மதுரை-தூத்துக்குடி, சென்னை-பெங்களூரு போன்ற வணிக வழித்தட தொழில் முனையங்களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும்.
அனைத்துவகை கொள்முதலில், வெளிப்படையான நடவடிக்கையை உறுதிப்படுத்தி தமிழகம் முதன் முதலில் சட்டம் கொண்டு வந்தது தற்போது மத்திய அரசும் இதுபோன்ற சட்டம் தேவை என்பதை உணர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க, துரிதமாக அனுமதி அளிக்க வகை செய்யும் புதிய சட்டத்தைப் பொறுத்தவரை, தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகளை மீறாத வகையில், மாநிலங்களிடமும் முழுமையாகக் கலந்தாலோசிக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில், படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்படும் திட்டங்களைச் சேர்ப்பதன் மூலமும், கச்சா பொருட்களுக்கு சுங்க வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலமும், வரிவிதிப்பின் பாதிப்பைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத் தக்கது.
நீண்ட காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ள வேண்டிய இந்த நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ச்சியாக
வலியுறுத்தி வந்துள்ளது .தமிழ்நாட்டில், மின்னணு வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த இந்த சீர்திருத்த நடவடிக்கையை தமிழக அரசு ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.பசுமை மின்னாற்றல் நிதிக்காக, நிலக்கரி டன் ஒன்றுக்கு
விதிக்கப்பட்டு வந்த 100 ரூபாய் வரி, 200 ரூபாயாக உயர்த்துவது - ரயில்வே பட்ஜெட்டில் நிலக்கரி சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த வரி உயர்வும் சேர்ந்திருப்பது மாநில மின்சார உற்பத்தி நிலையங்களைகடுமையாக பாதிக்கும் - அதன் தொடர்ச்சியாக, மின்சாரத்தின் விலையும் கடுமையாக உயர வழிவகுக்கும்.கறுப்புப் பணம் உருவாகும் வழிமுறைகளைக்கட்டுப்படுத்தும் வகையில், உள்நாட்டில் பணப் பரிவர்த்தனை மூலமான வர்த்தக நடவடிக்கைகளைக் குறைத்ததுடன், தேசத்திற்குச் சொந்தமான பணம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்படாமல் தடுக்க, மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த திட்டங்கள், வரவேற்கத்தக்கது.
அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழிவகை செய்வதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிதிச்சந்தையில் முதலீடு செய்வதை அதிகரித்து நேரடி முதலீட்டைக் குறைத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும் - இதனால், தொழில்துறையில் நேரடி அன்னிய முதலீட்டின் மூலம் கிடைக்கும் நீண்டகால பலன் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றமும் கடுமையாக பாதிக்கப்படும்.மொத்தத்தில் பலவகையான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதை நடப்பாண்டிலேயே துவங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
உலக பாரம்பர்ய நகரங்கள் அறிவிப்பில் தமிழகம் இடம் பெறாதது, ஏமாற்றம் அளிக்கிறது.இவ்வாறு ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.