எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேன் - உலகக் கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வேவிடம் கடைசி வரை போராடி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்.இந்த உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவுடன் தோல்வியுடன் சோகமாக தொடங்கியது பாகிஸ்தான். இந்தியாவை இதுவரை உலகக் கோப்பையில் வென்றதில்லை என்ற பெயரும் அது தக்க வைத்துக் கொண்டது. ஆனால் 2வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் மிக மோசமான தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் பி பிரிவில் தனது 3வது போட்டியாக, ஜிம்பாப்வே அணியைச் சந்தித்தது பாகிஸ்தான். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான். ஆனால் ஜிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சில் ஆடி போனது பாகிஸ்தான். அதிரடியாக ரன் குவிக்கவே விடவில்லை ஜிம்பாப்வே வீரர்கள். அடுத்தடுத்து விக்கெட்களும் விழுந்தபடி இருந்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் 200 ரன்களையாவது தாண்டுவார்களா, 50 ஓவர்கள் முழுமையாக ஆடுவார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது.
ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். இதனால் கட்டையைப் போட்டபடி ஆடினர். தெண்டாய் சத்தாராவின் பந்து வீச்சில் 3 முக்கிய பாகிஸ்தான் வீரர்கள் வீழ்ந்தனர். சத்தாரா 35 ரன்களை மட்டுமே கொடுத்து பாகிஸ்தானை நிலை குலைய வைத்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் நசீர் ஜாம்ஷெட் 1, அகமது செஷாத் ரன் எதுவும் எடுக்காமலும் வீழ்ந்தனர். முதல் இரு ஓவர்களிலேயே இவர்கள் வெளியேரி விட்டனர். கேப்டன் மிஸ்பா உல் ஹக்கோ கட்டை வீரராக மாறி சரமாரியாக கட்டையைப் போட்டார். ரன் எடுக்கவே பல நேரங்களில் இவர் முயற்சிக்கவில்லை. காரணம் விக்கெட்டை காப்பாற்ற. ஆனால் மறு முனையில் விக்கெட்கள் சாய்ந்தவண்ணம் இருந்தன.
முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெறும் 14 ரன்களை மட்டுமே சேர்த்து மிகக் கேவலமான நிலையில் இருந்தது. அந்த அளவுக்கு கட்டையைப் போட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் மிக மோசமான பேட்டிங் இதுதான். ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடியைக் காட்டவே முடியவில்லை பாகிஸ்தானால். இருப்பினும் மிஸ்பா உல் ஹக்கின் ஆட்டம், (121 பந்துகளில் 73 ரன்கள்), உமர் அக்மல்லின் 33 ரன்கள், ஹாரிஸ் சொஹைலின் 27 ரன்களும் அணியை சற்றே நிமிர வைத்தது.
இருப்பினும் கடைசி நேரத்தில் பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் குவித்த 54 ரன்கள்தான் பாகிஸ்தானின் கெளரவத்தைக் காக்க உதவியது. மிஸ்பா, 3வது விக்கெட்டுக்கு ஹாரிஸ் சொஹைலுடன் இணைந்து 54 ரன்களையும், 4வது விக்கெட்டுக்கு உமர் அக்மல்லுடன் 69 ரன்களையும் சேர்த்தார்.ஷாஹித் அப்ரிதிக்கு நேற்று 35வது பிறந்த நாளாகும். எனவே அவர் அதிரடி காட்டலாம் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றி விட்டார். 3 பந்துகளே அவர் நீடித்தார்.
அடுத்து ஆட வந்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டம் சரிவரவில்லை. இதுவரை எந்த போட்டியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாத வேகப் பந்து வீச்சாள் முகம்மது இர்பான் இந்த முறை அடுத்தடுத்து முதல் 3 விக்கெட்களையும் சாய்த்தார்.சமு சிபபா 9 ரன்களில் வீழ்ந்தார். சிக்கந்தர் ரஸா 8 ரன்களில் போனார். ஹாமில்டன் மஸ்கட்ஸா சற்றுப் போராடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவர்கள் விறுவிறுவென வீழ்ந்த நிலையில் பிரண்டன் டெய்ரும், சீன் வில்லியம்ஸும் போராட்டத்தில் குதித்தனர். டெய்லர் பிரமாதமாக ஆடிய நிலையில் சீன் வில்லியம்ஸ் அதிரடியாக ஆடினார். டெய்லர் 72 பந்துகளில் 50 ரன்களைத் தொட்ட நிலையில், வஹாப் ரியாஸ் பந்தில், மிஸ்பா உல் ஹக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். மறு முனையில் போராடிய சீன் வில்லியம்ஸ், 32 பந்துகளில் 33 ரன்களைக் குவித்து ரஹத் அலி பந்தில் வீழ்ந்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்துதான் பாகிஸ்தான் தரப்புக்கு நம்பிக்கை பிறந்தது.
ஜிம்பாப்வேயின் நம்பிக்கையும் தகர்ந்தது.
அதன் பின்னர் போராட்டம் கிரேக் எர்வின், சாலமோன் மைரிடம் வந்தது. ஆனால் மைர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை இர்பான் வெளியேற்றினார். அவர் போன அடுத்த சில நிமிடங்களில் எர்வின் வெளியேறினார். அவரை வஹாப் ரியாஸ் 14 ரன்களில் வெளியேற்றினார். வெற்றி இலக்கை அழகாக துரத்தி வந்த ஜிம்பாப்வே பரிதாபமாக கடைசி நேரத்தில் விக்கெட்களைப் பறி கொடுத்ததால் வெற்றித் துரத்தலை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
இருப்பினும் சிகும்பராவும், பன்யங்கராவும் கடைசி வரை விடாமல் வெற்றித் தேடலைத் தொடர்ந்தது பாகிஸ்தானியர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தது. இருவரும் கடைசி பந்து வரை விடாமல் போராடினர்.
கடைசி இரு ஓவர்களில் 28 ரன்களை எடுக்க வேண்டிய நிலை. ஆனால் 49வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை ரன்களாக மாற்றத் தவறியது ஜிம்பாப்வே. நான்காவது பந்தில் ஒரு சிங்கிள் கிடைத்தது. 5வது பந்தில் 2 ரன்கள் வந்தன. கடைசிப் பந்தில் ஒரு ரன்.50வது ஓவரில் 24 ரன்களை எடுக்க வேண்டும் என்ற கடினமான நிலைக்கு வந்து சேர்ந்தது ஜிம்பாப்வே. முதல் பந்து ரன்னாக மாறத் தவறியது. 2வது பந்தில் 3 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே. 3வது பந்தில் மாவீரன் சிகும்பரா பரிதாபமாக ஆட்டமிழந்தார்.
சிகும்பரா. 34 பந்துகளில் 35 ரன்களக் குவித்த சிகும்பரா, பன்யங்கராவுடன் இணைந்து 47 ரன்களைச் சேர்த்து வெளியேறினார். இறுதி வரை போராடிய பன்யங்கராவும் அடுத்து ரன் அவுட் ஆக ஜிம்பாப்வே அணி 49.4 ஓவர்களில் 215 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்தது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் தரப்பில் முகம்மது இர்பானும், வஹாப் ரியாஸும் தலா 4 விக்கெட்களைச் சாய்த்தனர். ரஹத் அலிக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பெற்றுள்ள முதல் வெற்றி இதுதான். அதுவும் கூட கடுமையாக போராடியதால் கிடைத்த வெற்றியாக மாறியிருப்பது பாகிஸ்தான் ரசிகர்களை வெறுப்படையவே வைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.