முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., உணவகத்தில் எம்.பி.க்களுடன் உணவருந்தினார் மோடி

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்றத்தில் உள்ள உணவகத்தில், எம்.பி.க்களுடன் ஒன்றாக அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உணவருந்தினார்.

பாராளுமன்றக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள 70-வது எண் அறையில், எம்.பி.க்களுக்குக்கான உணவகம் உள்ளது. அந்த உணவகத்துக்கு பிரதமர் மோடி பிற்பகல் 1 மணியளவிலவ் திடீரென வந்தார். அப்போது அங்கு 18 எம்பிக்கள் தனித் தனி குழுக்களாக உணவருந்திக் கொண்டிருந்தனர். பிரதமர் மோடியைக் கண்டதும், எம்பிக்களில் சிலர் அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு மோடி தனது வணக்கத்தை தெரிவித்தார். பின்னர் 3 எம்பிக்கள் அமர்ந்திருந்த மேஜையைத் தேர்வு செய்து, அவர்களுடன் அமர்ந்து மோடி உணவருந்தினார். அவருக்கு சைவச் சாப்பாடு, பழக்கலவை பரிமாறப்பட்டது. அதற்குக் கட்டணமாக 29 ரூபாய் அவர் செலுத்தினார்.

சுமார் 25 நிமிடங்கல், பாராளுமன்ற உணவகத்தில் மோடி இருந்தார். அவருடன் அமர்ந்து சாப்பிட்ட 3 எம்பிக்களில் இருவர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பின்னர், அவர்களுடன் மத்திய அமைச்சர் பியுஷ் கோயலும் சேர்ந்து கொண்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இதே உணவகத்தில் முன்பு உணவருந்தியுள்ளார். ஆனால், அவர் அப்போது பிரதமர் பதவியை வகிக்கவில்லை. இதனால், மோடியே அந்த உணவகத்தில் உணவருந்திய முதல் பிரதமராவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து