முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்தப்புள்ளி தாக்கலுக்கு பின்னர் மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றம்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஒப்பந்தப்புள்ளி சமர்பிக்கப்பட்ட பிறகு , மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், மோனோ ரயில் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று கேட்டார். இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

மோனோ ரெயில் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அதில் இரண்டு பன்னாட்டு நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தப் புள்ளியை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள், வரும் ஏப்ரல் 20-ந் தேதியாகும்.
அதன் பிறகு ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் மோனோ ரெயில் திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து