எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிர்பூர்: பாகிஸ்தான் அணியை ஒருநாள் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் முதன்முதலாக வென்று புதிய சாதனை படைத்தது வங்கதேசம். 3-வது போட்டியிலும் பாகிஸ்தானை வென்ற வங்கதேசம். மிர்பூரில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தனது கடைசி 8 விக்கெட்டுகளை 47 ரன்களில் இழந்து 49 ஓவர்களில் 250 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் சவுமியா சர்க்காரின் அனாயாச 127 நாட் அவுட்டினால் 39.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று தொடர் முழுதிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை முற்றொழிப்பு செய்தது.
சவுமியா சர்க்கார் 110 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 127 ரன்களை அடித்து நொறுக்கினார். தமிம் இக்பால் தொடர்ச்சியான 3-வது சதத்துக்காக ஆடி வந்தபோது 64 ரன்களில் ஜுனைத் கானிடம் எல்.பி.ஆனார். மஹமுதுல்லாவுக்கு இது ஒரு மோசமான தொடராக அமைந்தது. அவர் 4 ரன்களில் ஜுனைத் கான் பந்தில் பவுல்டு ஆனார். மீண்டும் முஷ்பிகுர் ரஹிம் களமிறங்கி 43 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆட்ட நாயகனாக சவுமியா சர்க்காரும், தொடர் நாயகனாக தமிம் இக்பாலும் தேர்வு செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் அணியில் கேப்டன்/தொடக்க வீரர் அசார் அலி 112 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் கேப்டன் ஒருவர் ஒருநாள் போட்டியில் எடுக்கும் முதல் சதம் ஆகும் இது. இவர் ஆட்டமிழந்ததுதான் திருப்பு முனையாக அமைந்தது. அசார் அலி-சமி ஆலம் ஜோடி 91 ரன்களையும், ஹாரிஸ் சோஹைலுடன் அசார் அலி இணைந்து 98 ரன்களையும் எடுக்க 39-வது ஓவரில் 203/2 என்று வலுவான நிலையில் இருந்தது பாகிஸ்தான். அறிமுக இடது கை வீரர் அஸ்லம் கவர் டிரைவ்களை லாவகமாக ஆடுகிறார். அதே போல் ஷார்ட் பிட்ச் என்றால் உடனடியாக புல் ஆடி விடுகிறார். 19-வயதான இவர் முதல் போட்டியில் 45 ரன்களை எடுத்தார். ஹாரிஸ் சோஹைல் ஸ்பின்னர்களை அடித்த 2 சிக்சர்கள் அற்புதம், இவர் 58 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்தார்.
அசார் அலி ஷார்ட் பிட்ச் பந்துகளை பவுண்டரி விளாசியதோடு, தேர்ட்மேன், பாயிண்ட் திசையில் பலமாகத் திகழ்ந்தார். சலீம் மாலிக் போல் சிங்கிள் எடுத்து ரன் விகிதத்தை நல்ல உயிர்ப்புடன் வைத்திருந்தார் அசார் அலி. சதம் அடித்த பிறகு ஷாகிப் அல் ஹசனின் உள்ளே திரும்பிய பந்தை கட் செய்ய முயன்றார், சிக்கவில்லை. ஆஃப் ஸ்டம்ப் தொந்தரவு ஆனது. ஒரு ஓவர் கழித்து மஷரபே பந்தை சுழற்றி ஹாரிஸ் சோஹைலும் வெளியேறினார். இந்த விக்கெட்டுகள் போலவே பவாத் ஆலம், ரிஸ்வான், வஹாப் ரியாஸ் ஆகியோரும் ஏன் அப்படி அவுட் ஆனார்கள் என்பதை விளக்க பாகிஸ்தான் வீர்ர்களின் உளவியல் தெரிந்த நிபுணர்களால் மட்டுமே முடியும். 47 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களில் முடிந்தது. மோர்டசா, ரூபல் ஹுசைன் அராபத் சன்னி, ஷாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
250 ரன்களை வெற்றிகரமாகத் தடுக்க நேற்று அஜ்மல் இல்லை. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் முதல் விக்கெட்டுக்காக 145 ரன்களைச் சேர்க்க அங்கேயே பாகிஸ்தான் கதை முடிந்தது. தமிம் கவனத்துடன் ஆட சவுமியா சர்க்கார் 35 பந்துகளில் 33 ரன்களை எட்டினார். மொகமது ஹபீஸ் ஒரு ஓவரில் சர்க்காரின் எட்ஜைப் பிடிக்க, விக்கெட் கீப்பர் ரிஸ்வானோ பிடியை விட்டார். மீண்டும் 52 ரன்களில் சர்க்கார் இருந்த போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் பந்தில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை அஸ்லம் கோட்டைவிட்டார்.
கேட்ச் விட்டதும் சுதாரித்த சர்க்கார், தமிம் அடுத்த ஹபீஸ் ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசினார். ஜுனைத் கானை மேலேறி வந்து நேராக ஒரு சிக்சர் அடித்தார் சர்க்கார். ஒரு நேரத்துக்குப் பிறகு சர்க்கார் பவுலர்களை மதிக்காமல் ஆடினார். 13 பவுண்டரிகள் 6 சிக்சர்களை அவர் விளாசினார். மீண்டும் அணியில் வந்த உமர் குல் 7 ஓவர்களில் 53 ரன்கள் என்று சாத்து வாங்கினார். ஜுனைத் கான் 7 ஓவர்களில் 67 ரன்கள் என்று விளாசப்பட்டார். வஹாப் ரியாஸ் 6 ஓவர்களில் 30 ரன்கள்.
வங்கதேசம் முதல் முறையாக பாகிஸ்தானை 3-0 என்று வீழ்த்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.