முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு ஜெயலலிதா நிதியுதவி

திங்கட்கிழமை, 4 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட திருவாரூர் நகர அதிமுக தொண்டர் ராமநாதன் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ 3 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து மக்களின் முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டு எனக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாமல், திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர 4 வது வார்டை சேர்ந்த ராம்ஜி என்ற என்.ராமநாதன் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்து கொண்டார் என்ற செய்தி அறிந்து என் மனம் துடிதுடித்தது.

என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புக்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் . அன்புசகோதரர் ராமநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மேலும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியாக ரூ 3 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து