முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாமுக்கு அஞ்சலி: வாரணாசியில் சிறப்பு கங்கா ஆரத்தி

புதன்கிழமை, 29 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

வாரணாசி: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்து வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சிறப்பு கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்துல் கலாமின் உடல் நேற்ரு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அப்துல் கலாமின் உடலுக்கு, இன்று இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

அப்துல் கலாமின் மறைவுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதனிடையே அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வாரணாசியில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்