முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் 4-ம் கட்ட தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவக்கம்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகாரில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 12-ம் தேதி தொடங்கி, நவம்பர் 5-ம் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 4-ம் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் புதனன்று தொடங்கியது.

மனு தாக்கல் செய்ய, வரும் 14-ம் தேதி கடைசி நாளாகும். மறுநாள், வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் 17-ம் தேதி கடைசி நாளாகும். பீகாரில் 5 கட்ட தேர்தலுக்குப் பின் நவம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்