முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீப் சாங்கில் எனக்கு சம்பந்தம் இல்லை: இசையமைப்பாளர் அனிரூத் அறிவிப்பு

திங்கட்கிழமை, 14 டிசம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை : பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல் வரிகளை நான் எழுதவில்லை. அந்த பாடலுக்கு நான் இசையமைக்கவுமில்லை என்று இசையமைப்பாளர் அனிரூத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு.,

நான் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்பித்த டோரன்டோ கச்சேரியின் வேலையில் மூழ்கி இருந்தேன். "பீப் சாங்" பற்றிய என்னுடைய நிலையை நான் இப்போது தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் அந்த பாடல் வரிகளை எழுதவில்லை, இசையமைக்கவில்லை, பாடவும் இல்லை. எதிர்பாராதவிதமாக என்னுடைய பெயர் இந்த சர்ச்சையில் இழுத்துவிடப்பட்டு சிக்கியுள்ளது. எனக்கு பெண்கள் மேல் மிகப்பெரிய அளவில் மரியாதை உள்ளது என்பதை நான் இசையமைத்த பாடல்களின் மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கும். விரும்பத்தகாத இந்த விஷயத்துக்காக நான் மிகவும் வருந்தியுகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்