எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம், இலவச வண்ணத் தொலைகாட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி. 21 அங்குலம் வழங்காமல் 14 அங்குல தொலைகாட்சி பெட்டிதான் வழங்கினார் என்று விழுப்புர பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான முதல்வர் ஜெயலலிதா நேற்று (வெள்ளிக் கிழமை), விழுப்புரம், திருச்சி பைபாஸ்-விழுப்புரம் செல்லும் வழியில் உள்ள ஆவின் பால் பண்ணை எதிரில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவர் சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு விழுப்புரம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது.,
தி.மு.க.-வினர் 2006-ம் ஆண்டு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர். பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவே இல்லை. அவர்கள் நிறைவேற்றாத சில திட்டங்களைப் பற்றி நான் ஏற்கனவே காஞ்சிபுரம் மற்றும் திருச்சி பொதுக் கூட்டங்களில் தெரிவித்திருந்தேன். தற்போது, தி.மு.க 2006-ம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து நிறைவேற்றாத மேலும் சில வாக்குறுதிகளைப் பற்றி இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் போதுமான குடியிருப்பு வசதி உருவாக்குவதற்கு ஒரு சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என தி.மு.க அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நவீன வசதிகளுடன் கொண்ட புதிய புறநகரங்களை உருவாக்கி, அங்கே அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவோம் என்ற வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டவர்கள் தான் தி.மு.க-வினர். தேசிய விளையாட்டு நிறுவனம் ஒன்றை தமிழகத்தில் உருவாக்குவோம் என்ற வாக்குறுதி, ஒவ்வொரு முக்கிய விளையாட்டிற்கும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி, விளையாடத் தேவையான சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை.
வணிக வெளிப்பணி மையங்கள் அதாவது, BPO-க்கள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குவதற்கு வழி வகை செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை கடலூர் முதல் கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தப்படும் என்ற வாக்குறுதிக்கு எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரையிலான 314 கி.மீ. நீளச் சாலை 125 கோடி ரூபாயில் மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள், உலக வங்கி கடன் உதவியுடன் தற்போதைய எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது. அதே போல், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான சாலையில் 13 நகரங்களுக்கு புறவழிச் சாலை அமைத்தல் மற்றும் சாலைகளை மேம்படுத்துதல், அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் 257 கோடி ரூபாய் செலவில் தற்போதைய எனது தலைமையிலான அ.தி.மு.க அரசினால் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருணாநிதியைப் பொறுத்தவரை, தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசி விடுவார். பின்னர் அதைச் செயல்படுத்தும் போது, அந்த திட்டத்தினால் தனக்கும் ``தன் மக்களுக்கும்'' என்ன ஆதாயம் கிடைக்கும்'' என்று பார்ப்பார். திட்டங்களினால் தங்களுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்றால் அந்த திட்டத்தையே செயல்படுத்தமாட்டார் கருணாநிதி. அதனால் தான், நான் தற்போது தெரிவித்த திட்டங்களை எல்லாம் கருணாநிதி செயல்படுத்தவில்லை. கருணாநிதி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து செயல்படுத்திய திட்டம் ஒன்று இருக்கிறது. அது தான் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம். இந்த திட்டத்திலும் மக்களை ஏமாற்றவே செய்தார் கருணாநிதி. எப்படி என்று கேட்கிறீர்களா? 2006-ம் ஆண்டில் வண்ண தொலைக்காட்சி பெட்டி என்றாலே ‘21 Inch’ தொலைக்காட்சி என்று தான் மக்கள் நினைத்தார்கள். ஏனெனில், சாதாரணமாக புழக்கத்தில் இருந்தது 21 Inch தொலைக்காட்சி பெட்டி தான். கருணாநிதிக்கு இந்த திட்டத்தின் மூலம் தன் குடும்பத்திற்கு கிடைக்கும் ஆதாயம் தான் முக்கியம். எனவே தான் மக்களை ஏமாற்றும் விதமாக 14 Inch வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கினார். மக்கள் 21 Inch தொலைக்காட்சிப் பெட்டி கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், 14 Inch வண்ண தொலைக்காட்சி பெட்டியை வழங்கினார். 2006-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னரே இலவச தொலைக்காட்சி பெட்டிக்கு கேபிள் இணைப்பு வேண்டுமே, அதற்கு மாதா மாதம் பணம் கட்ட வேண்டுமே, அதை யார் தருவார்கள் என மக்கள் கேள்விகள் கேட்ட போது, கருணாநிதி ``இலவச கேபிள் இணைப்பையும் கொடுத்து தொலைக்கிறேன்'' என்று கூறி மக்களை ஏமாற்றினார்.
இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி திட்டமே, தன் குடும்பத்திற்கு வருமானம் சேர்க்கும் திட்டம் தானே? எனவே தான், ``கொடுத்து தொலைக்க வேண்டியதை'' மறந்து விட்டார் கருணாநிதி. எதைக் கொடுத்து தொலைக்கிறேன் என்று சொன்னாரோ, அதை மறந்துவிட்டார் கருணாநிதி. இந்த இலவச தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சிகளை பார்க்க பாவம் மக்கள் கேபிள் இணைப்புக்கு மாதா மாதம் அதிக பணம் கட்ட வேண்டியிருந்தது. கேபிள் தொழிலையே அப்போது ஆட்டிப் படைத்தது கருணாநிதியின் பேரன்கள் தானே? கேபிள் இணைப்புக்கு பெறப்பட்ட சந்தா தொகை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டியவர்கள் தான் கருணாநிதியின் குடும்பத்தினர்.
2011-ம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக எண்ணிக்கையிலான தொலைக்காட்சி சேனல்களை வழங்கி வருகிறோம். 70 லட்சத்திற்கும் மேல் உள்ள சந்தாதாரர்கள் இதனால் பயன் பெற்று வருகின்றனர். தற்போது 2016-ம் ஆண்டும் கருணாநிதி பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால், அவர் மறந்தும் கூட குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி இணைப்பு தொடர்ந்து வழங்கப்படும் என சொல்லவே இல்லை.
தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்க உங்களை நாடி வரும் போது, 70 ரூபாய்க்கு பதிலாக 250 ரூபாய் கேபிள் கட்டணம் செலுத்தவா உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு அவர்களை விரட்டியடியுங்கள். இப்பொழுது நீங்கள் செலுத்துகின்ற கட்டணம் கேபிள் டிவி இணைப்புக்கு மாதம் 70 ரூபாய். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் 250 ரூபாய். இதை சொல்லியே நீங்கள் தி.மு.க-வினர் வாக்கு கேட்க வந்தால் துரத்தியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.