முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் செல்வராஜின் தாயார் மறைவு: ஜெயலலிதா இரங்கல்

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் அமைச்சர் செல்வராஜூன் தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜின் தாயார் ரங்கம்மாள் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்

தாயாரை இழந்து வாடும் அன்புசகோதரர் செல்வராஜூக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்