எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த 4 மணி நேர தாக்குதலில் தீவிரவாதிகளின் பல முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. காஷ்மீரின் உரி பகுதி யில் உள்ள ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலின் வடுக்கள் மறையாத நிலையில் உரி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத் தியது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப் பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. இது தொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ் தானிடம் இந்தியா வழங்கியது. ஆனால் இவற்றையெல்லாம் நிராகரித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரி தாக்குதல் இந்தியாவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என கூறி இந்தியாவை சீண்டி விட்டார். இந்த நிலையில் பாகிஸ் தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா திட்ட மிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்தவாறுதான் அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த முகாம்களை தாக்கி அழிக்க இந்திய ராணுவத்துக்கு உத் தரவு பிறப்பிக்கப்பட்டது.
‘சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்’ என்ற பெயரில் ராணுவத்தின் கமாண்டோ படை பிரிவு தாக்குதலுக்கு ஆயத்தமானது. புதன்கிழமை இரவு 12.30 மணிக்கு சுமார் 200 வீரர்கள் 8 குழுக்களாக பிரிந்து பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தனர். அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று அங்கி ருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். விமானப்படை போர் விமானங்களிலும், ஹெலி காப்டர்களிலும் இருந்தவாறு தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது குண்டு மழை பொழிந்தன. பாராசூட்களில் இறங்கியும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.இந்த அதிரடி தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டன.
முதலில் 5 முகாம்கள் அழிக் கப்பட்டதாகவும் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வெளியான தகவல் அடிப்படையில் 9 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் பதுங்கி இருந்த 40 முதல் 55 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. புதன் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் அதிகாலை 4.30 மணிக்கு முடிந்தது. இந்திய வீரர்கள் 4 மணி நேரத்தில் தங்கள் தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு முகாம் திரும்பினார்கள்.இந்த தாக்குதலில் இந் திய தரப்பில் எந்த சேதமும் இல்லை.
வீரர்கள் பத்திரமாக திரும்பும் வரை எந்த உதவிக்கும் தயார் நிலை யில் இந்திய எல்லையில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.இந்த தாக்கு தலின்போது பாகிஸ்தான் வீரர்கள் 9 பேர் பலியானார்கள். இதன்மூலம் தீவிரவாதிகளும் பாகிஸ்தான் ராணுவமும் பக்க பலமாக இருந்திருப் பது அம்பலமாகி உள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு விவகார கமிட்டி கூட்டத்தை கூட்டி அடுத்து எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில் தீவிர வாதிகள் முகாம் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து ராணுவ தளபதிகள் விளக்கி கூறினார்கள்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தக்கபதிலடி கொடுத்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் மக்கள் ஆடிப்பாடி வெற்றியை கொண்டாடினார்கள். ராணுவத்துக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டனர். 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது தான் இந்தியப் படைகள் பாகிஸ்தானுக் குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இப்போது 45 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப்படைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. போர் அல்லாத சமயங் களில் இந்திய வீரர்கள் எல்லை மீறியதே கிடையாது. முதல் முறையாக பாகிஸ்தானை எச்சரிக்கை விதமாகவும், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தற்போது தாக்குதல் நடத்தி உள்ளது.
பாகிஸ்தானும் பதில் தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதப்படுவதால் காஷ்மீர் முதல் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. எல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் வசிக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வரு கிறார்கள். பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள் ளது. இதனால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இதற்கிடையே உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில் மூத்த மத்திய அமைச்சர்கள் , உள்துறை அமைச்சக அதிகாரிகளும், பாதுகாப்புதுறை அதிகாரி களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.