முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துக்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

 லக்னே, உத்திரப்பிரசதேச மாநிலத்தில் சகரன்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்  பேசும் போது இந்துக்கள்  அதிக குழந்தைகளை  பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவில் இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும். ராமர் கோயில் கட்டவேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் ராமர் பக்கதர்கள் எண்ணிக்கையை அதிகாரிக்காமல் எப்படி  ராமர் கோயில் கட்டமுடியும்.  இந்த சமூகம்  தனது  மக்கள் தொகையை  அதிகரிக்க வேண்டும். நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் இந்துக்களின் மக்கள்  தொகை சரிந்து வந்துள்ளது. தேச பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்த 22 சதவீதம் இருந்த இந்துக்கள் தற்போது 1 சதவீதமாக குறைந்துள்ளனர்.  அப்போது இந்தியாவில் இந்துக்கள் 99 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும் இருந்தனர். ஆனால் தற்போது  முஸ்லிம்கள் 24 சதவிதமும்,  இந்துக்கள் 74 சதவீதமும் உள்ளனர்.

இவ்வாறு அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்