முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் போட்டி: தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினோம் - அலஸ்டயர் குக்

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டினம் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க நாங்கள் கடினமாக போராடினோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் அலஸ்டயர் குக் கூறினார். தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் அலஸ்டயர் குக் கருத்து தெரிவிக்கையில்,

‘இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்க நாங்கள் கடினமாக போராடினோம். இருப்பினும் முடிவில் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. முதல் நாளில் பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது. அதன் பிறகு கடினமாக இருந்தது. இங்கு ‘டாஸ்’ வெல்வது நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. 2-வது நாளில் 5 விக்கெட்டுகளை இழந்தாலும் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக கடைசி வரை எங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்தினோம்.

விராட்கோலி ரன் குவிப்பின் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தது எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியாக அமைந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அடுத்த 2 போட்டிகளில் வென்றால் தான் இந்த போட்டி தொடரில் நாங்கள் பின்தங்கிய நிலையில் இருந்து முன்னேற்றம் காண முடியும்’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்