எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஒரே ஆண்டில் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 16 லட்சம் பேர் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான வித்யாசாகர்ராவ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
இடம் ஒதுக்கி தந்த முதல்வர்
எல்லோருக்கும் எப்போதும் உயர்கல்வி என்ற தொலை நோக்கு சிந்தனையுடன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தினை தோற்றுவித்தவர் முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் மையப்பகுதியில் இடம் ஒதுக்கி தந்து அதற்கென தனிவளாகம் அமைத்து தந்து திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மகுடம் சூட்டியவர் முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் தொலைநிலைக் கல்விப் பாடத்திட்டத் திட்டங்களை ஒரே மாதிரியான தரத்தில் நெறிப்படுத்தி வழங்க கூடிய பொறுப்பினை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திடம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7 லட்சம் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்று வருகின்றனர்.
மேலை நாடுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்போர் எண்ணிக்கை மிக அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள், பொருளாதாரத்துறையினர், அறவியல் துறையினர் என்று அனைவரும் தங்களின் அறிவு விரிவாக்கத்திற்கு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தினையே நாடுகின்றனர். அந்த வகையில் பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. அப்படிப்பட்ட அடையாளத்ததை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் பெற வேண்டும்.
மாணவர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், மென்திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் எளிதில் வேலையை பெற முடியும். கடந்த ஆண்டு மட்டும் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 15.95 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். மோட்டார் வாகனத் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த உதிரி தொழில்களில் மட்டும் 2017க்குள் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என அவர் பேசினார்.
சாந்தா புகழாரம்
இந்த பட்டமளிப்பு விழாவில் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் சாந்தா பேருரையாற்றி பேசும்போது., தமிழகத்தில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவதற்காக 2002-ம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. அதில் தொழில் திறன் சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கியதன் மூலம் பெருமளவிலான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதற்காக தமிழக அரசுக்கும், பல்கலைக் கழகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
முதல்வருக்கு பாராட்டு
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு நிதியுதவி, சிறப்பு வகுப்பறைகள், மொழி ஆய்வகங்கள், கலைத்திட்ட மேம்பாடுகள், ஊட்ட சத்துடன் கூடிய மதிய உணவுத் திட்டம், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவித்தொகை, வெளிநாடுகளில் பயிலும் வாய்ப்புகள் என எத்தனையோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் புத்கதம், தேர்வு, விளையாட்டு என்பதோடு வெறுமனே கற்பிக்கும் இடம் மட்டுமாக இருக்காமல், உங்கள் திறன் வளர்க்கும் மையங்களாவும் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
14,060 பேருக்கு பட்டம்
இந்த பட்டமளிப்பு விழாவில் 3,522 முதுகலைப்பட்டமும், 7,659 இளங்கலைப் பட்டமும், 2,725 பட்டயமும், 154 முதுநிலை பட்டயமும் என 14 ஆயிரத்து 60 பேருக்கு வழங்கப்பட்டன. இவர்களில் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்ற 142 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை தமிழக ஆளுர் வித்யாசாகர்ராவ் வழங்கினார். அதேபோல், கனடாவில் உள்ள காமன்வெல்த் கல்விக் கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பாடத்திற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் 25 ஆயிரம் பரிசுத் தொகையை இளநிலை கம்ப்யூட்டர் பயன்பாடு பாடத்தை படித்த மாணவி முத்துவுக்கு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.