எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 2016 - 2017-ம் ஆண்டு நிதியாண்டில், 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2376 கோடி பயிர்க்கடன் வழங்கி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. மேலும் நவ. 23 முதல் டிச. 2 வரை வரை, 40,892 விவசாயிகளுக்கு ரூ.148.22 கோடி பயிர்க்கடன் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
இந்திய ரிசர்வ் வங்கி, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், 9.11.2016 முதல் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, செல்லத்தக்கவை அல்ல என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, 30.12.2016 வரை வங்கிக் கணக்குகளில் செலுத்தும் முறை பற்றியும் மேலும் அவற்றை மாற்றிக் கொள்வது குறித்தும் உரிய வழிகாட்டுதல்களை அறிவித்தது.
பழைய நோட்டுகளை பெற இயலாத நிலை
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன்படி, வங்கிகள் என பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் மற்றும் அதில் குறிப்பாக சொல்லப்பட்ட நிறுவனங்களும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இத்திட்டத்தை செயல்படுத்தும் என்று இந்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை 9.11.2016 அன்று அறிவிப்பு வெளியிட்டது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கி என்ற வரன்முறைக்குள் வரவில்லை. இதனால் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து பெற இயலாத நிலை ஏற்பட்டது.
கடன் வழங்க முடியாத நிலை
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணக்கு வைத்திருப்பதால் இச்சங்கங்கள் வாடிக்கையாளராகவே கருதப்படுகின்றன. இதன் காரணமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் ஒரு வாரத்திற்கு 24,000 ரூபாய் மட்டுமே ரொக்கமாக பெற இயலும் நிலை ஏற்பட்டது. எனவே, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க இயலாத நிலை ஏற்பட்டு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
மாற்றம் செய்யவும் தடை
9.11.2016 முதல் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று வந்த நிலையில், 14.11.2016 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் மூலம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில், செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று அவர்களது கணக்கிற்கு வரவு வைக்க இயலவில்லை. மேலும், செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மத்தியக் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக மாற்றம் செய்வதும் தடை செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளினால், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 30.12.2016 வரை செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை அவர்களது கணக்குகளில் செலுத்த அனுமதியிருந்தும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களும் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும், இந்த ரூபாய் நோட்டுகளைச் செலுத்த இயலவில்லை.
பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை
விவசாயிகளுக்கு தொடர்ந்து தடையின்றி பயிர்கடன் வழங்க ஏதுவாக அரசாணை எண். 132, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, நாள்.22.11.2016-ன் படி 22.11.2016 முதல் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
1.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தற்போதுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விவசாய உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பயிர்க்கடன்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
2.விவசாயிகளுக்கு விவசாயக் கடனின் ரொக்கப் பகுதியினை வழங்க ஏதுவாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் இணைக்கப்பட்டுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையில் பயிர்க்கடன் பெறும் விவசாய உறுப்பினர்களின் பெயரில் “உங்கள் வாடிக்கையாளரை அறிதல்” விதிமுறைகளைக் கடைபிடித்து கணக்குகள், பயிர்க் கடன் பெறும் ஒவ்வொரு கடன்தாரருக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்காமல், துவக்கப்பட்டு வருகிறது.
3.இப்பணி தொடர்பாக ஏற்படும் பணிப்பளுவினைச் சமாளிக்க ஏதுவாக மத்தியக் கூட்டுறவு வங்கிகள் ஓய்வு பெற்ற பணியாளர்களை தற்காலிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர்.
4.தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் அனுமதிக்கப்பட்ட உடன் கடன் தொகையின் ரொக்கப் பகுதியை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் துவக்கப்பட்டுள்ள விவசாய உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக தொடர்புடைய மத்திய கூட்டுறவு வங்கிக்கு பற்றுச் சீட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகள் தொடர்புடைய மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் விவசாய உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கப்பட்ட கடன் தொகையில், விவசாயி ஒரு வாரத்திற்கு 25,000 ரூபாய் ரொக்கமாக வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை பெற்று வருகின்றனர்.
5.விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களான உரம், விதைகள் ஆகியவைக்கான தொகையை ரொக்கமாக செலுத்த வலியுறுத்தாமல், அவர்களுக்கு பயிர்க் கடன் வழங்கும்போது அக்கணக்கில் பற்று வைத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழங்கி வருகின்றன. அதாவது, ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாயிகள் இடுபொருட்களைப் பெற இயலும்.
6.பயிர்க்காப்பீட்டுத் தொகையினை விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து, தொடர்புடைய காப்பீடு நிறுவனத்திற்கு மத்தியக் கூட்டுறவு வங்கிகள் 5.12.2016 க்கு முன்னர் செலுத்தும்.
7.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், வரைவோலை அல்லது ரொக்கமாக செலுத்தி தங்களுக்குத் தேவையான உரம், இடுபொருட்கள் மற்றும் விவசாயப் பணிகளுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் வழங்கி அரசு சாதனை
2015-16ம் நிதியாண்டில் 30.11.2015 வரை 7,42,629 விவசாயிகளுக்கு ரூ.4061.14 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டில், 30.11.2016 வரை 4,07,387 விவசாயிகளுக்கு ரூ.2376.83 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 23.11.2016 முதல் 02.12.2016 வரை மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் 76,440 விவசாய உறுப்பினர்களுக்கு கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் 40,892 விவசாயிகளுக்கு ரூ.148.22 கோடி பயிர்க்கடன் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. 32,430 விவசாயிகளுக்கு ரூ.23.99 கோடி அளவிற்கு ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாயிகள் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 19,250 விவசாயிகளுக்கு ரூ.1.78 கோடி பயிர்க்காப்பீட்டுத் தொகையினை விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து தொடர்புடைய காப்பீடு நிறுவனத்திற்கு 02.12.2016 வரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 23.11.2016 முதல் 02.12.2016 வரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறாத 2,64,967 விவசாயிகளிடமிருந்து ரூ.18.6 கோடி பயிர்காப்பீட்டுத்தொகை வசூலிக்கப்பட்டு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.