முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்பையும், பாசத்தையும் சொல்லும் அய்யனார் வீதி

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

Source: provided

ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘அய்யனார் வீதி’.

முக்கிய கதாபாத்திரத்தில்  K.பாக்கியராஜ், பொன்வண்ணன் நடிப்பில், கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் மற்றும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பாஸ்கரன் எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி N.ராஜ்குமார்.

பழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, கலை இலக்கியம், இவை எல்லாம் தமிழக வரலாற்றில் ஒன்றோடு ஒன்று மெல்லிய இழைகளாக பின்னிக் கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டினர் இந்தியாவை வியப்போடு பார்க்க துவங்கியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச்  சுழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு  சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்கு  தான் உண்டு.

அத்தகைய சூழல் மாறாமல், ஆபாசம்,  அசிங்கம், இரட்டைஅர்த்த வசனங்கள்.. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு...பாசம்... நட்பு...வீரம்...அளவான கோபம்...  இவை அனைத்தும் இன்னும் நம்மை  பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவும், குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கும் ஆவலை து£ண்டும் வண்ணம்... இந்த படத்தின் கதைக்களம்  அமைக்கப்பட்டுள்ளதுதான் “அய்யனார் வீதி’ படத்தின் வெற்றிக்கான சூட்சமம்.

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்களை இசையமைப்பபாளர் U.K.முரளியின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, ராஜபாளையம், மேலுர்,  மேலப்பூங்குடி, குற்றாலம்,  கொடைக்கானல், சொக்கலிங்கபுரம்,  சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.படப்பிடிப்பு முடிந்து பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருந்த இயக்குனர் N.ராஜ்குமாரிடம் படம் பற்றி கேட்டபோது:

உலகமே பார்த்து வியக்கும் கலாச்சாரத்தை கொண்ட நமது மக்களிடையே இப்போது நாகரீக மோக அதிகரித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நகரங்களில் மறைந்து கொண்டிருக்கும் அன்பு, பாசம், குடும்ப உறவுகளின் கலாச்சார பாரம்பரியம் கிராமங்களில் இன்னும் பல இடங்களில் அழியாமல் இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்வதுதான் ‘அய்யனார் வீதி’ கதை.

கதையே கேட்டதுமே பாக்யராஜ் சார் மிகவும் மகிழ்ச்சியோடு நடிக்க சம்மதித்தார். அவருக்கும் பொண்வண்ணனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நட்பை ஊரே எதிர்க்கிறது. அப்படி ஊரே எதிர்த்தாலும் நட்புக்காக எல்லாவற்றையும் எதிர்த்து இவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம்.

ஊரைக் காக்கும் அய்யனார் சாமியை பற்றி 108 மந்திரங்கள் அடங்கிய பாடலும் இடம் பெற்றிருக்கிறது. இதற்காக சாமி படம் என்று நினைக்க வேண்டாம். அழகான கிராமத்து நட்பை சொல்லும் படம். நட்பு, அன்பு, பாசம் அனைத்தும் இன்னமும் கிராமங்களில் மறையாமல் இருக்கிறது என்பதை ரொம்ப அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறேன்.

பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பதோடு, ஒரு பாடலும் எழுதியிருக்கிறார் தயாரிப்பாளர் செந்தில்வேல்.  அடுத்த மாதம் பாடல் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். 65 நாட்களில் மிக திட்டமிட்டு முழு படத்தையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி வருகிறோம் என்றார் இயக்குனர் ராஜ்குமார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்
திரைக்கதை, வசனம், இயக்கம் : ஜிப்ஸி N.ராஜ்குமார்
கதை - பாஸ்கரன்
ஒளிப்பதிவு-சக்திவேல்
இசை-U.K.முரளி
படத்தொகுப்பு-   சுரேஸ் ஆர்ஸ்
பாடல்கள்    -       பிரியன்
நடனம்   சிவராஜ் சங்கர்
ஆக்ஷன்-நாக்வுட் நந்தா
மக்கள் தொடர்பு    -  செல்வரகு
தயாரிப்பு P.செந்தில்குமார்  விஜயசங்கர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்