எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழக சட்டசபையில் நடைபெறுகிறது. இந்த நம்பிக்கை தீர்மானத்தில் பங்கேற்று வாக்களிக்குமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் மா.பா .பாண்டியராஜன் உள்ளிட்ட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கவர்னர் உத்தரவு
தமிழகத்தில் முதல்வராக பதவியேற்குமாறு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் விடுத்த அழைப்பினை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார். அவரோடு 30 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் ஆட்சியமைத்த 2-ம் நாளான இன்றே பெரும்பாண்மையை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக இன்று சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூவத்தூர் சென்று, எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அரசு கொறடா கடிதம்
இதைத்தொடர்ந்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 134 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கும் தபால் மூலம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். அதில் அரசை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்கும் தபால் மூலம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். அரசை ஆதரித்து தான் அவர்களும் வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.கவில் தான் உள்ளார்
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறாரே ?
பதில்: அதுபற்றி எனக்கு தெரியாது.
கேள்வி: முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா?
பதில்: அவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அ.தி.மு.கவில்தான் உள்ளார். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் சேர்த்து தான் தபால் மூலம் கடிதம் அனுப்பியிருக்கிறோம். அவர் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் அரசை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி: அவர்கள் எதிராக வாக்களித்தால் என்ன நிலை எடுப்பீர்கள்?
பதில்: அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எதிர்த்து வாக்களித்தால் என்ன நிலை எடுப்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது. மேலும் ஒ.பன்னீர்செல்வம் அணி என்று செய்திகள் வெளியாகின்றன. அப்படியொரு அணி இல்லை, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் அணி, 10 பேர் இருந்தால் அது நபர்கள் தான்.
கேள்வி: நாளை (இன்று) யார் தீர்மானம் கொண்டு வருவார்கள்?.
பதில்: நாளை (இன்று) சபைக்கு வாருங்கள், அப்போது தெரியும் என்றார் அவர்.
ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை, மாணிக்கம் உள்ளிட்ட எம்..எல்.ஏக்களுடன் தலைமை செயலகத்திற்கு வந்தார். சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார். இதன்பின்னர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில் இன்று சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்போம் என்றார் அவர். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
அவை முன்னவர்
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் அவை முன்னவராக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்தார். ஏற்கனவே சட்டமன்ற அவை முன்னவராக ஒ.பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு