முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - ஜம்மு-காஷ்மீர், இந்திய எல்லையில் ஊடுருவிய தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊடுருவல் முறியடிப்பு
காஷ்மீரில் இந்திய எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடுவதை எல்லைப் பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் பண்டிப்புரா மாவட்டத்தில் ஊடுருவலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயம் அடைந்தனர்.

தீவிரவாதி சுட்டுக்கொலை
ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.இந்த நிலையில் நேற்று காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கெரி செக்டார் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டனர். உடனே பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு ஊடுருவலை முறியடித்தனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 2 தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்