எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கச்சத்தீவை மீட்க உச்சநிதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆனால், தி.மு.க. என்ன செய்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் காட்டமாக கேட்டார். மேலும், கச்சத்தீவு பிரச்சனையில் துரோகம் செய்தது யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் ஆவேசமாக தெரிவித்தார்.
கவனஈர்ப்பு தீர்மானம்
இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது குறித்தும் நேற்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
தி.மு.க.வினர் எதிர்ப்பு
சமீபத்தில் நடந்த கொடூரமான தாக்குதலில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். மீனவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவது பற்றி எல்லாம் ஸ்டாலின் கூறினார். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டபோது ஸ்டாலின் உட்பட தி.மு.க.வினர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1974-ம் ஆண்டு என்றுதானே நான் சொன்னேன். அதற்கு ஏன் இப்படி எழுந்து நின்று கூச்சல் எழுப்புகிறீர்கள். நான் யாரைப் பற்றியும் எந்த கட்சி பற்றியும் குறிப்பிடவே இல்லையே? 1974 என்றதும் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார்.
அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு அமைச்சர் யாருடைய பெயரையும், எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே அனைவரும் அமைதியாக உட்காருங்கள் என்று கூறினார். அப்போது ஸ்டாலின் எழுந்து நான் இந்த பிரச்னையில் அரசியல் எதையும் கலக்கவில்லை. மீனவர் தாக்கப்படுவது குறித்துதான் பேசினேன். ஆனால் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று கூறுகிறார். அப்போது தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது என்றும் கூறினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு உங்கள் கட்சி பெயரை அமைச்சர் கூறவில்லை. அப்படி அவர் சொல்லி இருந்தால் நீங்கள் விளக்கமளிக்கலாம். அவர் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்றுதானே சொன்னார். உங்கள் கட்சி பெயரை அமைச்சர் சொல்லவில்லையே என்று கூறினார்.
தி.மு.க.வினர் மீண்டும் கூச்சல்
மீண்டும் தி.மு.க.வினர் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள். இதற்கிடையில் அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து பேசினார். நான் வரலாற்று குறிப்புகளைத்தான் சொன்னேன். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உங்கள் கட்சி தலைவர் பற்றியும் சொல்லவில்லை. இதற்கு நீங்கள் கோபப்படத் தேவை இல்லையே. 1974-ம் ஆண்டு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று ஜெயக்குமார் கேட்டார். மீண்டும் ஸ்டாலின் எழுந்து பேசினார்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவு பிரச்சினை எழுந்தபோது கருணாநிதி அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. அதனை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது என்று கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி கச்சத்தீவு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியது என்று ஸ்டாலின் கூறினார்.
துரோகம் செய்தது யார்?
உடனே அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து கச்சத்தீவை மீட்க அம்மா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஜெயலலிதா உறுதியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். 1998-ம் ஆண்டு கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீங்கள் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபின் இதுபோன்று வழக்கு தொடர்ந்தீர்களா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேட்டார். கச்சத்தீவு பற்றி அம்மா பலமுறை இந்த மன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு பிரச்சினையில் யார் துரோகம் செய்தது என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்று ஜெயக்குமார் கூறினார்.
கடந்த 17-ம் தேதி அன்று டெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நானும், அமைச்சர்களும் சந்தித்து தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது பற்றியும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பேசினோம் என்று ஜெயக்குமார் கூறினார். மத்திய அமைச்சரிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
மீனவர்களை சுடக்கூடாது
நமது எல்லைக்குள் தமிழக மீனவர்கள் அமைதியாக மீன்பிடிக்கும்போது காற்றின் வேகம் காரணமாகவும், திசை மாறுவதாலும் கற்பனை எல்லைக்கோட்டை தாண்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலை ஏற்பட்டால் மீனவர்களை தாக்கக்கூடாது, சுடக்கூடாது, வலைகளை அறுக்கக்கூடாது. அப்படியே மீனவர்கள் பிடிபட்டாலும் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
முதலாவதாக, பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் அமைதியான முறையில் மீன்பிடிக்க மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். 2-வதாக தமிழக மீனவர்களை சிறை பிடிக்கக்கூடாது, துன்புறுத்தக்கூடாது, சுடக்கூடாது என்று கோரிக்கை வைத்தோம். 3-வதாக ஏற்கனவே பிடிபட்ட 128 விசைப்படகுகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று கோரினோம்.
பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க விசேஷ தொகுப்பாக 1,664 கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று பிரதமரிடம் ஏற்கனவே அம்மா வலியுறுத்தி இருந்தார். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சுடப்படுவது நிச்சயம் தடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.