முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனு நீதி நாள் முகாமில் 94 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா அருங்குன்றம் கிராமத்தில் புதன்கிழமையன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட சார் ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினர், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி, வட்டாட்சியர் ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டாட்சியர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.

 94 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி உதவித் தொகை 11 நபர்களுக்கும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 11 நபர்களுக்கும், விதவை உதவித் தொகை – 01 நபருக்கும், புதிய குடுமப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் 71 நபர்கள் என 94 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் அருங்குன்றம் மற்றும் அதை சுறறியுள்ள கிராமங்களிலிருந்து பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் கொண்ட 151 மனுக்கள் பெறப்பட்டது. மனு நீதி நாள் முகாமையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மானாம்பதி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் பாரதிதாசன், மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் மற்றும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அருங்குன்றம், நெற்குன்றம், நீர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பயனாளிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அருங்குன்றம் வருவாய் ஆய்வாளர் கோமளா நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்