எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில், நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சில வாரங்களாக தருமபுரி மாவட்டத்தில் சில இடங்களில் காணப்படும் பன்றி காய்ச்சல் பற்றியும், காய்ச்சல் நோய் அதிகரிப்பு பற்றியும் மற்றும் கொசுவினால் பரப்பப்படும் மலேரியா, டெங்கு, மற்றும் சிக்கன்குன்யா நோய்கள், தண்ணீரால் பரவக்கூடிய டைப்பாய்டு, காலரா போன்ற நோய்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள பேரல்கள், தொட்டிகள், பானைகள், பாத்திரங்கள், ஆகியவைகளில் கொசுக்கள் உற்பத்தியாகும். அத்தைகய இடங்களை மூடிவைக்கவும் வாரம் ஒருமுறை கழுவி சுத்தம் செய்யவும் தண்ணீர் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடி வைக்கவும், தேவையற்ற, உபயோகமற்ற வீசி எறியப்பட்ட உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கப், டயர்கள், தேங்காய் மூடிகள் மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய அனைத்து பொருட்களும் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டுமெனவும், கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும், மேலும், டெங்கு நோய் தடுப்பு பணிக்காக டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் (ஆயணனழழசள) மாவட்ட கலெக்டர் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பாக 80 களப்பணியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பயன்படுத்தப்படாத கிணறு (ரரௌநன றநடட) களில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் தேங்காமல் மற்றும் கொசுப்புழு வளராமல் இருக்க சுகாதார செயலாளருக்கு எடுத்துரைத்தனர். டெங்கு நோய் தடுப்பு பணியில் மாணவர்களும் தங்களது வீட்டில் கொசுப்புழு பெருகும் இடங்களை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழிக்கவும் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களும் குளோரினேசன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், மேலும் நகராட்சி,; பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதிர் கொசுக்களை அழிக்கவும் அடிக்கடி புகை மருந்து அடிக்கவும், மேலும், காய்ச்சல் கண்டவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டுமெனவும், போலி மருத்துவர்களை அணுக வேண்டாம் எனவும், போலி மருத்துவர்கள் யவரேனும் தங்கள் பகுதிகளில் இருந்தால் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ்அப் எண். 8903891077 மூலம் புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட மேலாளர் சுகாதாரப்பணிகள்) மரு. ராஜ்குமார், உதவி திட்ட மேலாளர் (சுகாதாரப்பணிகள்) மரு. பாலவெங்கடேசன், கொள்ளைநோய் தடுப்பு மருத்துவர் (சுகாதார பணிகள்) மரு. விவேக், மருத்துவ அலுவலர் (பென்னாகரம்) மரு. கனிமொழி, மாவட்ட மலேரியா நோய் தடுப்பு அலுவலர் சிவராஜ், சித்த மருத்துவ அலுவலர் மரு. சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வைளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026 -
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Jan 2026சென்னை, தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்
01 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
2026-ல் மட்டும் நடைபெறும் 3 உலகக்கோப்பை போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து
01 Jan 2026மும்பை, புதியதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் பீகாரில் என்கவுன்ட்டரில் படுகொலை
01 Jan 2026பெகுசராய், பீகார் மாநிலத்தில் 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டார்.
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் மம்தானி
01 Jan 2026நியூயார்க், 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்றதன் மூலம் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.
-
நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து
01 Jan 2026ஆம்ஸ்டர்டாம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.



