எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் புதுடெல்லி இந்திய சமூக ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வு முறை பற்றிய 10 நாள் பயிற்சி பட்டறையின் தொடக்க விழா நேற்று நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை கருத்தரங்க அறையில் நடைபெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து 30 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கின்றனர்.
அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியரும் இப்பயிற்சி பட்டறையின் இயக்குநருமான கா.மணிமேகலை இவ்விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் இந்த பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஆய்வு மாணவர்கள் ஆய்வைப் பற்றிய முழுமையான அறிவை இந்த 10 நாள் பயிற்சி பட்டறை மூலம் பெறுவர் என்று கூறினார். சமூகவியல் ஆராய்சிக்குப் பயன்படும் புள்ளியியல் தொகுப்பு மற்றும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை தெளிவாக எழுதுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் சமூக ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் ஆராய்ச்சி முடிவுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பெற்று திட்டங்கள் மூலமாக சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் தலைமை வகித்தார். அவர் தமதுரையில் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயிற்சிப் பட்டறை அமைந்துள்ளது என்றார். தலைப்பை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்; என்றும், முந்தைய ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, இதுவரை அனுகாத சமுதாயத்திற்கு உதவுவதாக உள்ள ஒரு தலைப்பைத் தெளிவு செய்து தீவிரமாக ஆய்வு செய்தல் மிக மிக முக்கியம் என்றார். இந்த 10 நாள் பயிற்சி பட்டறையில்; ஆராய்ச்சியின் முக்கிய பகுதிகளான முந்தைய ஆராய்சிகள் பற்றிய தெளிவு, ஆய்வுக்கான மாதிரிகளை தேர்வு செய்வது மற்றும் ஆராய்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தெரிந்து கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார். சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் சமூகவியல் ஆய்வுகள் அமைய வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக மனோன்மனியம் சுந்தரனார் பல்ககை;கழக துணைவேந்தர் பேரா.கே.பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு முக்கிய உரை ஆற்றினார். அவர் தமது உரையில் அறிவியல் ஆராய்ச்சி என்பது தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், சமூக ஆராய்ச்சி என்பது சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்றார். சமுதாய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான சரியான தீர்வுகளை காண்பது என்பது ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். சமுதாய முன்னேற்றத்தில் ஆய்வு மாணவர்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ஆகவே அவர்கள் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். திருநங்கையர்கள், சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய நிலையில் உள்ள பிரிவினர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவான சமூக ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆய்வு மாணவர்கள் தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று தம் கருத்துரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மகளிரியல் மையத்தின் இணை ஆய்வாளர் முனைவர் என்.கே. புவனேஸ்வரி நன்றி கூறினார். பேராசியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
தி.மு.க. கூட்டணிக்குதான் வெற்றி: கனிமொழி எம்.பி.
05 Jul 2025திருநெல்வேலி : வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணிக்கு தான் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.