எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் புதுடெல்லி இந்திய சமூக ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வு முறை பற்றிய 10 நாள் பயிற்சி பட்டறையின் தொடக்க விழா நேற்று நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை கருத்தரங்க அறையில் நடைபெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து 30 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கின்றனர்.
அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியரும் இப்பயிற்சி பட்டறையின் இயக்குநருமான கா.மணிமேகலை இவ்விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் இந்த பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஆய்வு மாணவர்கள் ஆய்வைப் பற்றிய முழுமையான அறிவை இந்த 10 நாள் பயிற்சி பட்டறை மூலம் பெறுவர் என்று கூறினார். சமூகவியல் ஆராய்சிக்குப் பயன்படும் புள்ளியியல் தொகுப்பு மற்றும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை தெளிவாக எழுதுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் சமூக ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் ஆராய்ச்சி முடிவுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பெற்று திட்டங்கள் மூலமாக சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் தலைமை வகித்தார். அவர் தமதுரையில் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயிற்சிப் பட்டறை அமைந்துள்ளது என்றார். தலைப்பை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்; என்றும், முந்தைய ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, இதுவரை அனுகாத சமுதாயத்திற்கு உதவுவதாக உள்ள ஒரு தலைப்பைத் தெளிவு செய்து தீவிரமாக ஆய்வு செய்தல் மிக மிக முக்கியம் என்றார். இந்த 10 நாள் பயிற்சி பட்டறையில்; ஆராய்ச்சியின் முக்கிய பகுதிகளான முந்தைய ஆராய்சிகள் பற்றிய தெளிவு, ஆய்வுக்கான மாதிரிகளை தேர்வு செய்வது மற்றும் ஆராய்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தெரிந்து கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார். சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் சமூகவியல் ஆய்வுகள் அமைய வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக மனோன்மனியம் சுந்தரனார் பல்ககை;கழக துணைவேந்தர் பேரா.கே.பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு முக்கிய உரை ஆற்றினார். அவர் தமது உரையில் அறிவியல் ஆராய்ச்சி என்பது தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், சமூக ஆராய்ச்சி என்பது சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்றார். சமுதாய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான சரியான தீர்வுகளை காண்பது என்பது ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். சமுதாய முன்னேற்றத்தில் ஆய்வு மாணவர்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ஆகவே அவர்கள் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். திருநங்கையர்கள், சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய நிலையில் உள்ள பிரிவினர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவான சமூக ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆய்வு மாணவர்கள் தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று தம் கருத்துரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மகளிரியல் மையத்தின் இணை ஆய்வாளர் முனைவர் என்.கே. புவனேஸ்வரி நன்றி கூறினார். பேராசியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
அமெரிக்காவில் விமான விபத்து: 3 பேர் பலி
17 Oct 2025மிச்சிகன், அமெரிக்காவில் சிறியரக விமான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.