முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரனை 5 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை டி.டி.வி.தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசுக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தினகரனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவு டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். பிறகு நேற்று பிற்பகலில் அவர் டெல்லியில் திஸ் ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் தினகரனிடம் விசாரணை நடத்த அனுமதி வேண்டி டெல்லி காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் நிராகரிப்பு
அதே சமயம் விசாரணைக்கு தினகரன் ஒத்துழைப்பு தந்து வரும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தினகரன் தரப்பு வழக்கறிஞரும் தனது வாதத்தை முன் வைத்தார். ஆனால் தினகரன் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த திஸ் ஹாசாரே நீதிமன்றம், தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் சென்னை, பெங்களூரு, கொச்சின் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று டி.டி.வி.தினகரனிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்