முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலம்பியாவில் படகு நீரில் மூழ்கி விபத்து: 9 பேர் பலி

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

குவாட்பி, கொலம்பியா நாட்டில் 150 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு, ஏரியில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். மாயமான 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

கொலம்பியா நாட்டின்  குவாட்பி  பகுதியில் ஏரளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் அங்குள்ள ஏரியில் 150க்கும் மேற்பட்டசுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென நீரில் மூழ்கியது. இதனால் தண்ணீரில் தத்தளித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து, படகில் இருப்பவர்களை மீட்க அந்நாட்டு விமான படை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. படகு முழ்கியதற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாயமான 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து