முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்வோர்: பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் கேப்டன் விராட் கோலி !

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : சமூக வலைதளங்களில் அதிக பேரால் பின்பற்றப்படும் இந்தியர்களில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார்.

3.5 கோடி பேர் ...

சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரால் பின்தொடரப்படும் பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட்  அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலியை பேஸ்புக்கில் 3.5 கோடி பேர் பின் தொடருகின்றனர். உலகில் அதிகம் பேர் பின்தொடரும் கிரிக்கெட் வீரராகவும் விராட் கோலி இருக்கிறார்.

4.22 கோடி பேர் ...

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பிரதமர் மோடியை 4.22 கோடி பேர் பின்தொடருகின்றனர். பேஸ்புக்கில் அதிகம் பேர் பின்தொடரும் பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக  நடிகர் சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில், சல்மான் கானை விட விராட் கோலி பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் அதிகமாகும். விராட் கோலியை டுவிட்டரில் 16 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 14 லட்சம் பேரும் பின்தொடருகின்றனர்.

தொடர விருப்பம்

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில்,’ ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வைத்துள்ள பாசத்துக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. அவர்களின் அன்பு விலைமதிப்பில்லாதது. இது எப்போதும் தொடர வேண்டும்,என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து