எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினியரிங் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து என்ஜினியரிங் கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்குகிறது.
ஐகோர்ட்டில் மனு
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் முகம்மது ஜலீல். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு தொழில் கல்விகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2006-ன் படி சிறுபான்மை அல்லாத சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இந்த இடங்களில் ஒற்றை சாளர முறையின்படி நிரப்பப்படுகிறது.
காலியாக ...
2007-ம் ஆண்டு மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 784 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 94 ஆயிரத்து 346 இடங்களும், 2008-ம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 680 இடங்களில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 565 இடங்களும், 2009-ம் ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 790 இடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டன.ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது மிகவும் குறைந்து விட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2014-ம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் இடங்களும், 2015-ம் ஆண்டு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 83 இடங்களும், 2016-ம் ஆண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரம் இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டன.
22 கல்லூரிகள் மூட ...
சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்கள் பெரும் பகுதி இடங்களை அரசிடம் கலந்தாய்வுக்காக ஒப்படைக்கின்றன. ஆனால் கலந்தாய்வு முடிந்து நிரப்பப்படாத இடங்கள் கடைசி நேரத்தில் அந்த கல்லூரிகளுக்கு திருப்பி ஒப்படைக்கப்படுவதால், அவற்றை கல்லூரி நிர்வாகத்தாலும் நிரப்ப முடிவதில்லை. இதனால் தனியார் சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை. வருவாய் குறைவதால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்தாண்டு மட்டும் 22 என்ஜினியரிங் கல்லூரிகள் மூட விண்ணப்பித்துள்ளன.
தடை விதிக்க ...
நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவுள்ள கலந்தாய்வில் சுமார் 60 சதவீத இடங்கள், அதாவது ஒரு லட்சத்துக்கும் மேலான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள், தங்களது கல்லூரிகளில் உள்ள இடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அல்லது சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களின், அரசுக்கு வழங்கும் இடங்களின் சதவீதத்தை மாற்றியமைக்க வேண்டும். இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கடந்த 7-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என்ஜினியரிங் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் வரும் 27-ந் தேதி நடத்தும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். என் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கை நிராகரிப்பு
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, கலந்தாய்வு இல்லாமல் அரசு ஒதுக்கீட்டு இடத்தை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளேன்’ என்றார். அதற்கு நீதிபதி, என்ஜினியரிங் படிப்புக்கு கலந்தாய்வு கண்டிப்பாக நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் முடியாது’ என்றார். அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, ‘ஏற்கனவே அரசுக்கு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீத இடங்களை வழங்குவதை கல்லூரி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டது. தற்போது அந்த இடங்களை எல்லாம் திருப்பிக் கேட்க முடியாது’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாததத்தையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
கலந்தாய்வு 17-ல் தொடக்கம்
இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜூலை 17-ம் தேதியிலிருந்து என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும். இந்தக் கலந்தாய்வு இணையம் மூலமாக நடத்தப்படும். இக் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 19, 20 ஆகிய நாட்களில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும். இந்த கல்வியாண்டில் என்ஜினியரிங் படிப்பில் சேர 1.47 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.