எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் தெரிவித்துள்ளார்.
தென் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மண்டல கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, விஜய் சம்ப்லா, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, புதுச்சேரி சமூக நலம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை செயலாளர் ஜி.லதா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான நிதி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், போதை மறுவாழ்வு மையத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
ரூ.60 கோடி செலவில் உறைவிட பள்ளி
இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ரூ.60 கோடி ரூபாய் செலவில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும்.
6 முதல் 12 வகுப்பு வரையில் ஆதிதிராவிட (ஷெட்யூல் வகுப்பு) மாணவிகளுக்கு இந்த பள்ளிகளில் உறைவிட வசதியுடன் கல்வி அளிக்கப்படும். இதற்கான பள்ளிக் கட்டிடங்கள் 12 கோடி செலவில் கட்டப்படும். மலைப் பகுதிகளில் இத்தகையப் பள்ளிகள் அமைக்க 16 கோடி ரூபாய் வீதம் மத்திய அரசு வழங்கும்.
இந்த பள்ளிகளில் ஏற்படும் தொடர் செலவினங்களை முதல் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். 4வது ஆண்டு முதல் இப்பள்ளிகளில் நடப்புச் செலவினம் மத்திய மாநில அரசுகளால் 60%, 40% என்ற விகிதாச்சாரத்தில் செலவிடப்படும்.இப்பள்ளிகளில் பயிலும் மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூபாய் 85,000 வீதம் மத்திய அரசு வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.
முதியோருக்கு விசேஷ திட்டம்
மத்திய அரசு முதியோருக்கான பிரத்யகமான புதிய திட்டம் ஒன்றை அறிவித்து செயல்படுத்தி வருவகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டில் தென் சென்னையிலும் கன்னியாகுமரியிலும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கபட்ட முதியவர்களுக்கு கண் கண்ணாடி, சக்கர நாற்காலி, செயற்கைப் பல் செட் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
10ம் வகுப்புகளுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான ஷெட்யூல்ட் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மத்திய அரசு அறிவித்த நெறிகளின் படி அந்தந்த மாணவ மாணவியரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும். இதற்கென அந்தந்த மாநிலங்களில் வலைதளங்களை உருவாக்கி விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். மத்திய அரசின் நெறிமுறைகளின்படி செயல்படாத மாநிலங்களுக்கு இனி மானியங்கள் வழங்கப்பாடது என்று கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் கூறினார்.
ஓரிரு வாரங்களில்…
ஜி.லதாகிருஷ்ண ராவ் முன்னதாக கூட்டத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலர் ஜி.லதாகிருஷ்ண ராவ் கூறுகையில், எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விவரங்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற சில மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்த விவரங்களை உடனடியாக, ஓரிரு வாரங்களில் இந்த மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், நிதி ரத்து செய்யப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
09 May 2025புதுடில்லி, புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
09 May 2025புதுடில்லி, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
இனிமேல் நம்முடைய பாதை சிங்கப்பாதையாக இருக்கும் திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.
-
ஐ.பி.எல். நடத்தினால் ரத்த ஆறு ஓடும்: சேப்பாக்கம் மைதானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
09 May 2025சென்னை, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
09 May 2025சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கை
-
விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு
-
பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
09 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
-
வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில்
09 May 2025இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியி
-
தாக்குதல் முயற்சி முறியடிப்பு; பாதுகாப்பு படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
09 May 2025ஸ்ரீநகர், 'பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.