முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தியின் 149-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே.அத்வானி ஆகியோர் காந்தியின் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தியடிகளின் 149-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலைக்கு வித்திட்ட, இந்திய விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்திய காந்தியடிகள் தேசப்பிதா காந்தியின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதமர் தனது ட்விட்டரில்  மகாத்மா காந்தியை வணங்குவதாகவும், மகாத்மாவின் கொள்கைகள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமாக அமைந்திருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார். டெல்லி ராஜ்காட்டில்  அவரது நினைவிடத்தில் வாகன நிறுத்தும் இடத்தில்  நிறுவப்பட்ட  காந்தி உருவச் சிலையை  துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து