முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜகஸ்தானில் பயங்கரம்: பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

கசாக்: கஜகஸ்தானில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் சமரா நகரில் இருந்து கஜகஸ்தானில் உள்ள ஹிம்கென்ட் என்ற நகருக்கு பேருந்து ஒன்று 55 பயணிகள், ஊழியர்கள் 2 பேருடன் சேர்த்து 57 பேர்களுடன்சென்று  கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் இருந்து தீ குபு குபுவென எரிய தொடங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்திற்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் அனைவரும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்து நேற்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து