முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 'ஓகி' புயல் பாதிப்பு குறித்த மத்தியக்கு குழு அறிக்கை தாக்கல்

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தில் 'ஓகி' புயல் பாதிப்பு குறித்த மத்தியக்கு குழுவின் அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சஞ்சீவ்குமார் ஜிண்டால் தலைமையிலான குழு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ரூ.325 கோடி நிதி...
தமிழகத்தை சென்ற மாதம் ஓகி புயல் மிகவும் மோசமாக தாக்கியது. கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவு ஆகிய பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி உதவி வழக்கப்படவுள்ளது. இதில் தமிழகத்திற்கு 280 கோடி வழங்கப்படும். இந்த நிலையில் ஓகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தது. சஞ்சீவ்குமார் ஜிண்டால் தலைமையிலான குழு குமரி, சென்னை, தூத்துக்குடி, கடலூர் போன்ற பகுதிகளில் தங்கள் ஆயவை செய்தது. தற்போது இந்த ஆய்வு முழுவதுமாக முடிந்து இருக்கிறது. இந்த ஆய்வு குறித்து மத்திய குழு அறிக்கை சமர்பித்து இருக்கிறது.

உள்துறை அமைச்சகத்திடம்...
இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அறிக்கை மீது உள்துறை அமைச்சர் முடிவெடுப்பார். இதன் பின் தமிழகத்திற்கு வழங்கப்படும் 2-ம் கட்ட நிவாரண நிதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முதலில் போதுமான அளவு நிவாரண நிதி கொடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து