முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க பாக்.கிற்கு இந்தியா வலியுறுத்தல்

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பயங்கரவாதி ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீது உலகம் அறிந்த பயங்கரவாதி. இதுபோன்ற சர்வதேச பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டவேண்டும். சர்வதேச நாடுகளின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் இதைச் செய்ய வேண்டும். ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது விஷயத்தில் பாகிஸ்தான் எப்போதும் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது.

நீண்ட காலத்துக்கு பாகிஸ்தானால் நடிக்க முடியாது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து, பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு ரவீஷ்குமார் கூறினார். ஆனால், ஹபீஸ் சயீது மீது எந்த வழக்கும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் பேட்டியளித்தார்.

இதைத் தொடர்ந்தே இந்தியா தனது நிலையை வெளியுறவு அமைச்சகம் மூலம் தெரிவித்துள்ளது. ஹபீஸ் சயீது மீது சட்டப்படியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கவேண்டும் என்று அமெரிக்கா கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தது. இது தொடர்பாக வாஷிங்டனிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மூலம் கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து