முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் சத்துணவு பணியாளர்களுக்கான சிறப்பு புத்தாக்க பயிற்சியை ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார். தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சத்துணவு உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது குழந்தைகளுக்கு சுத்தமான மற்றும் சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு சத்துணவு ஊழியர்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டு வந்த இந்த மகத்தான திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 2லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர் என்று கூறினார். இப்பயிற்சி முகாமில் 10000க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து