முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டுத்தீயால் மரணமடைந்தோர் 11பேரின் குடும்பத்திற்கு கவர்னர் பன்வாரிலால் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காட்டுத்தீயால் மரணம் அடைந்த 11 பேர் குடும்பத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:

தேனி மாவட்டத்தில் போடி அருகே உள்ள குரங்கணி மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் மலையேரும் பயிற்சிக்குழுவில் உள்ள 11 பேர் அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து எனது உள்ளம் மிகுந்த வேதனையால் நிறைந்துள்ளது. தீ விபத்தில் பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும் இவர்களை இழந்து தவிக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து உத்வேகத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மருத்துவமனையில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் மலையேரும் வீரர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம் அடைய தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வதில் நானும் தமிழக மக்களோடு இணைந்து பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து