எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் நகரை அடுத்து நடுப்பட்டி என்னும் கிராமத்தில் அருள்மிகு. சிங்காரதோப்பு முனீஸ்வரர் காவல் தெய்வமாக வழக்குகளைத் தீர்க்கும் நீதிபதியாகவும், தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் தண்டல் நாயகமாக மிகப் புகழுடன் விளங்கி வருகிறார். இங்கு துரிஞ்சி மரங்களும், அசோக மரங்களும், கீரி மரங்களும், செவ்வலரிச் செடிகளும் நிறைந்து காணப்படும் தோப்பாக விளங்குவதால் இதனை சிங்காரத்தோப்பு என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவுடைய அழகிய வனத்தில் அருள்மிகு. சிங்காரதோப்பு முனீஸ்வரர் என்று எழுந்தருளினார் என்பது யாருக்குமே தெரியாது.
ஆங்கிலேயர்கள் ஆண்ட அந்த காலத்தில் சேலத்திலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் வழியே புகை வண்டி பாதை அமைத்தனர். மொரப்பூரைத் தாண்டி சிந்தல்பாடி வரை அந்த இருப்புப்பாதை போடும் பணி நடந்து கொண்டிருந்தது. இருப்புப் பாதை அமைக்கும் பணி சிங்காரதோப்பு வழியாகவும் நடைபெற்றது. தோப்பின் அருகே தண்டவாளங்களை பொருத்தி முடிக்கும் போது இரவு வந்தது. பணியாளர்கள் பணிகளை நிறுத்தி விட்டு தங்கும் இடத்திற்குச் சென்றனர். காலையில் வந்து பார்க்கும்போது தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டு இடமாறிக் கிடந்தன. யார் செய்த வேலை என அதிகாரிகள் விசாரித்தனர். தமக்கு எதுவும் தெரியாது என அப்பகுதி மக்கள் கூறினர்.
ஒருநாள் வேலை வீணாகி விட்டதே என்ற கவலையோடும், சினத்தோடும் மீண்டும் தண்டவாளங்களை பொருத்தி முடித்து பின்னர் தங்கள் இருப்பிடம் சென்றனர். அன்று இரவு பணியாளர் ஒருவரின் கனவில் அருள்மிகு. முனீஸ்வரர் தோன்றி, தான் இங்கு குடி கொண்டிருக்கும் சிங்காரத்தோப்பை காட்டி அங்கே தனக்கொரு கோயில் எழுப்ப வேண்டும் எனப் பணிந்தார். அரசுப் பணியாளர்களும் தாம் கனவில் கண்ட சிங்காரதோப்பு அருள்மிகு. முனீஸ்வரருக்கு களிமண்ணாலும், சுண்ணாம்பாலும் ஆன சிலை செய்து மேடை மீது முறைப்படி அமர்த்தி வழிபட்டனர். அதன் பிறகே அவர்கள் இருப்புப் பாதை அமைக்கும் பணி இடையூரின்றி சிறப்பாக நிறைவுற்றது. அதனால் மகிழ்ந்த பணியாளர்கள் அன்று முதல் ஆண்டுதோறும் ஆயுத பூஜை தினத்தன்று முனீஸ்வரர் ஆலயத்திற்கு வருந்து வழிபடுகின்றனர். இப்பூஜைக்கான செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்கிறது எனவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இங்கு சுமார் 21 அடி உயரமுள்ள நீண்ட மேடை மீது இரண்டு முனீஸ்வரர் சிலைகள் உள்ளன. தென்புறமுள்ள சிலை 11 அடி உயரமும், வடபுறமுள்ள சிலை 7 அடி உயரமுடன் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மேடை மீது குதிரைகளம், சிப்பாய்களும், பாம்புபிடாரனும் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இரண்டு முனீஸ்வரர்களுக்கும் முன்னால் மேடையின் மீது இரண்டு கற்சிலைகள் உள்ளன. அவற்றின் பழமையை பார்க்கும்போது அவை இரண்டும் ஆதியில் இருந்தே முனீஸ்வரர் சிலையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. இரண்டு முனீஸ்வரர்களுக்கு எதிரில் நிறைய சூலங்களும் வேல்களும் நடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று கிராம மக்கள் சுவாமிக்கு மாவிளக்கு எடுத்து விழா கொண்டாடுகின்றனர். ஆடி மாதம் 18-ம் தேதியன்று பெருக்கன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆவணி மாதம் ஆயுத பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப்பத்திருநாளில் நூற்றுக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றி முனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. தை மாதம் பொங்கல் விழாவின் போது பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று பவுர்ணமியும் சேர்ந்த நாளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று உத்திரப் பெருவிழா நடைபெறுகிறது.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தங்களுக்கு மக்கள் செல்வத்தை தந்தருள வேண்டியும், நிலத்தகராறு மற்றும் குடும்பத் தகராறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நீதிபதியாகவும், தங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித்தர மறுப்பவர்கள் போன்றவர்களைத் தண்டிக்கவும் , தங்கள் எதிரியை பழி வாங்கவும் முனீஸ்வரனை வேண்டி முறைப்பாடு செய்கின்றனர். அவ்வாறு வேண்டுபவர்கள் ஒரு கோழியைக் கொண்டு வந்து எதிரிலுள்ள கீரி மரத்தில் கட்டித் தொங்க விடுகின்றனர். அத்துடன் வேலுக்குப் பூஜை செய்து, அதனை தலைகீழாக நட்டும் வைக்கின்றனர். பல தேவைகள், ஏக்கங்கள், தாக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தங்கள் குறைகள் நீங்கிய பிறகு பொங்கலிட்டு, கோழியோ ஆடோ அறுத்து படைக்கின்றனர். பலருக்கும் அன்னதானம் செய்கின்றனர். தலைகீழாக நட்ட வேலை பிராத்தனை தீர்ந்தவுடன் மறுபடியும் பூஜை செய்து மீண்டும் சரியாக நட்டு வைக்கின்றனர்.
தொகுப்பு : குமரவேல்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க