முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      சினிமா
Image Unavailable

ஜோத்பூர் : மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் கான் இரண்டு நாட்களில் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து